FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 3, 2016

உலகம் \ மனித உரிமைகள் - உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03



டிச.02,2016. மாற்றுத்திறனாளிகள், மற்ற மனிதருக்குச் சமமாகவும், மதிப்புமிக்கவராகவும் முழுமையாக ஏற்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

டிசம்பர் 03, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்படும், உலக மாற்றுத்திறனாளிகள் நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகளவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தங்களில், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தமும் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 169 நாடுகளின் கையெழுத்துடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொது அவை, இசைவு தெரிவித்தது என்றும், கூறியுள்ளார் பான் கி மூன்.

மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் முழுமையாக ஏற்கப்படுவது, 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை எட்டுவதற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்பட்டு, அவர்கள், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் முழுமையாக ஏற்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள், உடல் அல்லது, மன வளர்ச்சியில், ஏதாவது ஒரு குறைபாடுள்ளவர்கள். மாற்றுத்திறனாளிகளுள், பத்து கோடிக்கு அதிகமானவர்கள் சிறார். மாற்றுத்திறனாளிகளுள், எண்பது விழுக்காட்டினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment