FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 3, 2016

உலகம் \ மனித உரிமைகள் - உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03



டிச.02,2016. மாற்றுத்திறனாளிகள், மற்ற மனிதருக்குச் சமமாகவும், மதிப்புமிக்கவராகவும் முழுமையாக ஏற்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

டிசம்பர் 03, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்படும், உலக மாற்றுத்திறனாளிகள் நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகளவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தங்களில், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தமும் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 169 நாடுகளின் கையெழுத்துடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொது அவை, இசைவு தெரிவித்தது என்றும், கூறியுள்ளார் பான் கி மூன்.

மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் முழுமையாக ஏற்கப்படுவது, 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை எட்டுவதற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்பட்டு, அவர்கள், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் முழுமையாக ஏற்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள், உடல் அல்லது, மன வளர்ச்சியில், ஏதாவது ஒரு குறைபாடுள்ளவர்கள். மாற்றுத்திறனாளிகளுள், பத்து கோடிக்கு அதிகமானவர்கள் சிறார். மாற்றுத்திறனாளிகளுள், எண்பது விழுக்காட்டினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment