FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, December 7, 2016

மாற்றுத்திறனாளிகள் மன உறுதிக்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் பிரதமர் மோடி

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons) கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும். இயலாமையை இல்லாமை ஆக்குவது என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அவர்களிடத்தில் நம்பிக்கை ஊட்ட வேண்டும். மாற்றுத் திறனாளி மறுவாழ்வுப் பணியில் ஈடுபடுபவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை மேம்பட சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிந்துள்ளார். அதில், "மாற்றுத் திறன்கொண்ட சகோதரர்கள், சகோதரிகளின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளும், சமத்துவமும் முழுமையாக நாடு தழுவிய அளவில் கிடைத்திட முழு வீச்சில் செயல்படுவோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment