FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, December 7, 2016

மாற்றுத்திறனாளிகள் மன உறுதிக்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் பிரதமர் மோடி

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons) கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும். இயலாமையை இல்லாமை ஆக்குவது என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அவர்களிடத்தில் நம்பிக்கை ஊட்ட வேண்டும். மாற்றுத் திறனாளி மறுவாழ்வுப் பணியில் ஈடுபடுபவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை மேம்பட சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிந்துள்ளார். அதில், "மாற்றுத் திறன்கொண்ட சகோதரர்கள், சகோதரிகளின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளும், சமத்துவமும் முழுமையாக நாடு தழுவிய அளவில் கிடைத்திட முழு வீச்சில் செயல்படுவோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment