FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, December 18, 2016

நல்ல குடும்பங்களால் தான் நல்ல சமுதாயம் உருவாகும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

17.12.2016, திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி கலையரங்கில் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்கள் சார்பில் புனித அன்னை தெரசா நினைவு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.

மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மேலும் இது போன்ற தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து அவையங்களும் நல்ல நிலையில் உள்ள திருநங்கைகளும் குடும்பங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்படுகின்றனர். முதியோர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளதையும் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக அரசு பல உதவிகளைச் செய்தாலும், இது போன்ற சமூக அமைப்புகளும் உதவிகள், சேவைகள் செய்து வருகின்றனர்.

நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்சியுடன் வாழும் போது தான் நல்ல சமுதாயம் உருவாகும். குடும்பங்கள் தன்னிரைவு பெற்று சுய சார்புடன் திகழும.; நமது மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு நரசிங்க நல்லூர் பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 9160 நபர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்களையும் வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சாந்தி குளோரி எமரால்டு, பெல் மெர்ரிக் நிர்வாகி திரு.சஞ்சய்சிங், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தம்பி, புனித அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு தலைவர் திரு.பாப்புராஜ், மற்றும் நண்பர்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment