FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, December 18, 2016

நல்ல குடும்பங்களால் தான் நல்ல சமுதாயம் உருவாகும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

17.12.2016, திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி கலையரங்கில் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்கள் சார்பில் புனித அன்னை தெரசா நினைவு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.

மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மேலும் இது போன்ற தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து அவையங்களும் நல்ல நிலையில் உள்ள திருநங்கைகளும் குடும்பங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்படுகின்றனர். முதியோர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளதையும் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக அரசு பல உதவிகளைச் செய்தாலும், இது போன்ற சமூக அமைப்புகளும் உதவிகள், சேவைகள் செய்து வருகின்றனர்.

நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்சியுடன் வாழும் போது தான் நல்ல சமுதாயம் உருவாகும். குடும்பங்கள் தன்னிரைவு பெற்று சுய சார்புடன் திகழும.; நமது மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு நரசிங்க நல்லூர் பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 9160 நபர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்களையும் வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சாந்தி குளோரி எமரால்டு, பெல் மெர்ரிக் நிர்வாகி திரு.சஞ்சய்சிங், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தம்பி, புனித அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு தலைவர் திரு.பாப்புராஜ், மற்றும் நண்பர்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment