FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, December 18, 2016

நல்ல குடும்பங்களால் தான் நல்ல சமுதாயம் உருவாகும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

17.12.2016, திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி கலையரங்கில் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்கள் சார்பில் புனித அன்னை தெரசா நினைவு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.

மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மேலும் இது போன்ற தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து அவையங்களும் நல்ல நிலையில் உள்ள திருநங்கைகளும் குடும்பங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்படுகின்றனர். முதியோர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளதையும் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக அரசு பல உதவிகளைச் செய்தாலும், இது போன்ற சமூக அமைப்புகளும் உதவிகள், சேவைகள் செய்து வருகின்றனர்.

நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்சியுடன் வாழும் போது தான் நல்ல சமுதாயம் உருவாகும். குடும்பங்கள் தன்னிரைவு பெற்று சுய சார்புடன் திகழும.; நமது மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு நரசிங்க நல்லூர் பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 9160 நபர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்களையும் வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சாந்தி குளோரி எமரால்டு, பெல் மெர்ரிக் நிர்வாகி திரு.சஞ்சய்சிங், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தம்பி, புனித அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு தலைவர் திரு.பாப்புராஜ், மற்றும் நண்பர்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment