FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, December 18, 2016

நல்ல குடும்பங்களால் தான் நல்ல சமுதாயம் உருவாகும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

17.12.2016, திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி கலையரங்கில் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்கள் சார்பில் புனித அன்னை தெரசா நினைவு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.

மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மேலும் இது போன்ற தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து அவையங்களும் நல்ல நிலையில் உள்ள திருநங்கைகளும் குடும்பங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்படுகின்றனர். முதியோர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளதையும் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக அரசு பல உதவிகளைச் செய்தாலும், இது போன்ற சமூக அமைப்புகளும் உதவிகள், சேவைகள் செய்து வருகின்றனர்.

நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்சியுடன் வாழும் போது தான் நல்ல சமுதாயம் உருவாகும். குடும்பங்கள் தன்னிரைவு பெற்று சுய சார்புடன் திகழும.; நமது மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு நரசிங்க நல்லூர் பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 9160 நபர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்களையும் வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சாந்தி குளோரி எமரால்டு, பெல் மெர்ரிக் நிர்வாகி திரு.சஞ்சய்சிங், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தம்பி, புனித அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு தலைவர் திரு.பாப்புராஜ், மற்றும் நண்பர்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment