FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 1, 2016

மாற்றுத்திறனாளிகள் மசோதா: டிச.3-இல் புதுதில்லியில் பேரணி

30.11.2016
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்து விளக்கம் கேட்டு டிசம்பர் 3-ஆம் தேதி புதுதில்லியில் பேரணி நடத்தப் போவதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் அளித்தது. இதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதோடு, வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வருகின்றனர். இதற்காக, கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வலியுறுத்தும் இயக்கம், ஆளுநரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்கும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் டிசம்பர் 2-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து டிசம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சென்னையிலிருந்து புதுதில்லிக்கு 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment