FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, December 1, 2016

மாற்றுத்திறனாளிகள் மசோதா: டிச.3-இல் புதுதில்லியில் பேரணி

30.11.2016
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்து விளக்கம் கேட்டு டிசம்பர் 3-ஆம் தேதி புதுதில்லியில் பேரணி நடத்தப் போவதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் அளித்தது. இதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதோடு, வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வருகின்றனர். இதற்காக, கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வலியுறுத்தும் இயக்கம், ஆளுநரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்கும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் டிசம்பர் 2-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து டிசம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சென்னையிலிருந்து புதுதில்லிக்கு 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment