FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, December 1, 2016

மாற்றுத்திறனாளிகள் மசோதா: டிச.3-இல் புதுதில்லியில் பேரணி

30.11.2016
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்து விளக்கம் கேட்டு டிசம்பர் 3-ஆம் தேதி புதுதில்லியில் பேரணி நடத்தப் போவதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் அளித்தது. இதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதோடு, வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வருகின்றனர். இதற்காக, கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வலியுறுத்தும் இயக்கம், ஆளுநரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்கும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் டிசம்பர் 2-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து டிசம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சென்னையிலிருந்து புதுதில்லிக்கு 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment