FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 1, 2016

மாற்றுத்திறனாளிகள் மசோதா: டிச.3-இல் புதுதில்லியில் பேரணி

30.11.2016
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்து விளக்கம் கேட்டு டிசம்பர் 3-ஆம் தேதி புதுதில்லியில் பேரணி நடத்தப் போவதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் அளித்தது. இதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதோடு, வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வருகின்றனர். இதற்காக, கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வலியுறுத்தும் இயக்கம், ஆளுநரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்கும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் டிசம்பர் 2-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து டிசம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சென்னையிலிருந்து புதுதில்லிக்கு 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment