FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 19, 2016

முகம் நூறு: கனவே ஓவியமாக

11.12.2016
சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஓவியக் கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுவேதா. கண்களை விரித்து, கைகளை அசைத்து சுவேதா கூறுவதை மொழிப் பெயர்த்துக்கொண்டிருந்தார் அவரது அப்பா கணேசன். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான சுவேதா Surrealism எனப்படும் ஆழ்மன வெளிப்பாடுகளை ஓவியமாக வடித்திருந்தார்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சுவேதா, தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். மகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கணேசன். “இரண்டரை வயதாக இருக்கும்போது மாம்பழம், பந்து போன்றவற்றை வரைந்து காட்டுவேன். அதையும் திருத்தி அழகாக மாற்றுவார் சுவேதா. பென்சில் ஓவியங்களில் அவரின் கலை ஆர்வத்தைப் பார்த்து, ஓவியம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தேன். விரைவாகவே வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் வகை ஓவியங்கள் என்று வரையத் தொடங்கினார். பிறகு எழும்பூரில் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்தார். பள்ளி இறுதியிலிருந்து தன்னுடைய செலவுகளுக்கு அவரே டியூஷன் எடுத்து, சம்பாதித்துக்கொள்கிறார். தன்னம்பிக்கை மிக்கவர்” என்று பெருமிதமாகச் சொன்னார்.


சுவேதாவுக்கு 2010-ம் ஆண்டில் சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான ஜனாதிபதி விருதை, அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கியிருக்கிறார். அத்துடன் யுவகலா பாரதி உள்ளிட்ட பல விருதுகள் இவர் வசமாகியிருக்கின்றன. நம் வாயசைவுகளை வைத்துப் புரிந்துகொண்டு பதிலளிக்கத் தொடங்குகிறார் சுவேதா. “குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கும்போது அவர்களின் படைப்பாற்றல் மேம்படும். இதைத்தான் என்னிடம் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அதனால் இதைத்தான் வரைய வேண்டும் என்று கூற மாட்டேன். அவர்கள் விரும்பியவற்றை வரையுமாறு வலியுறுத்துவேன். அதில் திருத்தம் செய்வேன். அத்துடன் காலத்துக்கேற்ற பயிற்சியையும் வழங்கி வருகிறேன்” என்பவர், 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

“எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியத்தைக் கையிலெடுத்தேன். கனவில் தோன்றுவதை அப்படியே கோடுகளாக வரைகிறேன். கலை, குழந்தைகளின் சிரிப்பு, தியானம் இவையெல்லாம்தான் நமக்கு ஆறுதல் தருபவை. என்னுடைய ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர்களின் உணர்வுகளும் அதில் பிரதிபலித்திருக்கும்” என்று கூறும் சுவேதா, சென்னை லலித்கலா அகாடமி, பெங்களூரு, உத்தரகாண்ட், டில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திவருகிறார். பிரபல ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, விஸ்வம், அல்போன்சா உள்ளிட்டோரின் பாராட்டுகளைத் தான் பெற்ற பரிசுகளில் உயர்வானதாக நினைக்கிறார்.

“ஓவியங்கள் குறித்த புரிதலும், கலை மீதான ஆர்வமும் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. இன்னும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தி, மாணவர்களிடமும் மக்களிடமும் ஓவியக் கலையின் பல பரிமாணங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திறனை வெளிப்படுத்தும் படைப்புவெளி எளிதாக்கப்பட வேண்டும். இப்போது இணையத்தில் என் ஓவியங்களை விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் சுவேதா.

No comments:

Post a Comment