FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 19, 2016

முகம் நூறு: கனவே ஓவியமாக

11.12.2016
சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஓவியக் கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுவேதா. கண்களை விரித்து, கைகளை அசைத்து சுவேதா கூறுவதை மொழிப் பெயர்த்துக்கொண்டிருந்தார் அவரது அப்பா கணேசன். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான சுவேதா Surrealism எனப்படும் ஆழ்மன வெளிப்பாடுகளை ஓவியமாக வடித்திருந்தார்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சுவேதா, தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். மகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கணேசன். “இரண்டரை வயதாக இருக்கும்போது மாம்பழம், பந்து போன்றவற்றை வரைந்து காட்டுவேன். அதையும் திருத்தி அழகாக மாற்றுவார் சுவேதா. பென்சில் ஓவியங்களில் அவரின் கலை ஆர்வத்தைப் பார்த்து, ஓவியம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தேன். விரைவாகவே வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் வகை ஓவியங்கள் என்று வரையத் தொடங்கினார். பிறகு எழும்பூரில் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்தார். பள்ளி இறுதியிலிருந்து தன்னுடைய செலவுகளுக்கு அவரே டியூஷன் எடுத்து, சம்பாதித்துக்கொள்கிறார். தன்னம்பிக்கை மிக்கவர்” என்று பெருமிதமாகச் சொன்னார்.


சுவேதாவுக்கு 2010-ம் ஆண்டில் சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான ஜனாதிபதி விருதை, அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கியிருக்கிறார். அத்துடன் யுவகலா பாரதி உள்ளிட்ட பல விருதுகள் இவர் வசமாகியிருக்கின்றன. நம் வாயசைவுகளை வைத்துப் புரிந்துகொண்டு பதிலளிக்கத் தொடங்குகிறார் சுவேதா. “குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கும்போது அவர்களின் படைப்பாற்றல் மேம்படும். இதைத்தான் என்னிடம் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அதனால் இதைத்தான் வரைய வேண்டும் என்று கூற மாட்டேன். அவர்கள் விரும்பியவற்றை வரையுமாறு வலியுறுத்துவேன். அதில் திருத்தம் செய்வேன். அத்துடன் காலத்துக்கேற்ற பயிற்சியையும் வழங்கி வருகிறேன்” என்பவர், 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

“எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியத்தைக் கையிலெடுத்தேன். கனவில் தோன்றுவதை அப்படியே கோடுகளாக வரைகிறேன். கலை, குழந்தைகளின் சிரிப்பு, தியானம் இவையெல்லாம்தான் நமக்கு ஆறுதல் தருபவை. என்னுடைய ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர்களின் உணர்வுகளும் அதில் பிரதிபலித்திருக்கும்” என்று கூறும் சுவேதா, சென்னை லலித்கலா அகாடமி, பெங்களூரு, உத்தரகாண்ட், டில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திவருகிறார். பிரபல ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, விஸ்வம், அல்போன்சா உள்ளிட்டோரின் பாராட்டுகளைத் தான் பெற்ற பரிசுகளில் உயர்வானதாக நினைக்கிறார்.

“ஓவியங்கள் குறித்த புரிதலும், கலை மீதான ஆர்வமும் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. இன்னும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தி, மாணவர்களிடமும் மக்களிடமும் ஓவியக் கலையின் பல பரிமாணங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திறனை வெளிப்படுத்தும் படைப்புவெளி எளிதாக்கப்பட வேண்டும். இப்போது இணையத்தில் என் ஓவியங்களை விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் சுவேதா.

No comments:

Post a Comment