FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 19, 2016

முகம் நூறு: கனவே ஓவியமாக

11.12.2016
சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஓவியக் கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுவேதா. கண்களை விரித்து, கைகளை அசைத்து சுவேதா கூறுவதை மொழிப் பெயர்த்துக்கொண்டிருந்தார் அவரது அப்பா கணேசன். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான சுவேதா Surrealism எனப்படும் ஆழ்மன வெளிப்பாடுகளை ஓவியமாக வடித்திருந்தார்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சுவேதா, தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். மகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கணேசன். “இரண்டரை வயதாக இருக்கும்போது மாம்பழம், பந்து போன்றவற்றை வரைந்து காட்டுவேன். அதையும் திருத்தி அழகாக மாற்றுவார் சுவேதா. பென்சில் ஓவியங்களில் அவரின் கலை ஆர்வத்தைப் பார்த்து, ஓவியம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தேன். விரைவாகவே வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் வகை ஓவியங்கள் என்று வரையத் தொடங்கினார். பிறகு எழும்பூரில் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்தார். பள்ளி இறுதியிலிருந்து தன்னுடைய செலவுகளுக்கு அவரே டியூஷன் எடுத்து, சம்பாதித்துக்கொள்கிறார். தன்னம்பிக்கை மிக்கவர்” என்று பெருமிதமாகச் சொன்னார்.


சுவேதாவுக்கு 2010-ம் ஆண்டில் சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான ஜனாதிபதி விருதை, அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கியிருக்கிறார். அத்துடன் யுவகலா பாரதி உள்ளிட்ட பல விருதுகள் இவர் வசமாகியிருக்கின்றன. நம் வாயசைவுகளை வைத்துப் புரிந்துகொண்டு பதிலளிக்கத் தொடங்குகிறார் சுவேதா. “குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கும்போது அவர்களின் படைப்பாற்றல் மேம்படும். இதைத்தான் என்னிடம் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அதனால் இதைத்தான் வரைய வேண்டும் என்று கூற மாட்டேன். அவர்கள் விரும்பியவற்றை வரையுமாறு வலியுறுத்துவேன். அதில் திருத்தம் செய்வேன். அத்துடன் காலத்துக்கேற்ற பயிற்சியையும் வழங்கி வருகிறேன்” என்பவர், 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

“எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியத்தைக் கையிலெடுத்தேன். கனவில் தோன்றுவதை அப்படியே கோடுகளாக வரைகிறேன். கலை, குழந்தைகளின் சிரிப்பு, தியானம் இவையெல்லாம்தான் நமக்கு ஆறுதல் தருபவை. என்னுடைய ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர்களின் உணர்வுகளும் அதில் பிரதிபலித்திருக்கும்” என்று கூறும் சுவேதா, சென்னை லலித்கலா அகாடமி, பெங்களூரு, உத்தரகாண்ட், டில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திவருகிறார். பிரபல ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, விஸ்வம், அல்போன்சா உள்ளிட்டோரின் பாராட்டுகளைத் தான் பெற்ற பரிசுகளில் உயர்வானதாக நினைக்கிறார்.

“ஓவியங்கள் குறித்த புரிதலும், கலை மீதான ஆர்வமும் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. இன்னும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தி, மாணவர்களிடமும் மக்களிடமும் ஓவியக் கலையின் பல பரிமாணங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திறனை வெளிப்படுத்தும் படைப்புவெளி எளிதாக்கப்பட வேண்டும். இப்போது இணையத்தில் என் ஓவியங்களை விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் சுவேதா.

No comments:

Post a Comment