FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, December 15, 2016

மாநிலங்களவை: மாற்றுத் திறனாளி உரிமைகள் மசோதா நிறைவேற்றம்

14.12.2016, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மசோதா ஒருமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரூபாய் மதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் "2014-ஆம் ஆண்டைய மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா'வை விவாதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் புதன்கிழமை வலியுறுத்தினர்.

குறிப்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குலாம் நபி ஆசாத் பேசுகையில், "மாநிலங்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை நிறைவேற்றவில்லையெனில், மக்களவையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (நாடாளுமன்ற கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைவதை மேற்கோள்காட்டினார்) அதை நிறைவேற்றுவது கடினம்; எனவே விவாதமின்றி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அந்த மசோதாவை உடனடியாக அவையில் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இதை மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் ஏற்றுக் கொண்டார். எனினும், அந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றுவதை அவர் விரும்பவில்லை. சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த உறுப்பினர்கள் விவாதத்தில் பேச வேண்டும் என்று குரியன் தெரிவித்தார்.

அதன்படி, உடனடிக் கேள்வி நேரத்தில் நேரத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. பிறகு, உணவு இடைவேளை நேரத்துக்குப் பிறகு அவை கூடியதும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைய 3 நாள்கள் மீதமிருந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பும், உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், 2014-ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதா கொண்டு வரப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவோருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்பட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment