FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, December 15, 2016

மாநிலங்களவை: மாற்றுத் திறனாளி உரிமைகள் மசோதா நிறைவேற்றம்

14.12.2016, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மசோதா ஒருமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரூபாய் மதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் "2014-ஆம் ஆண்டைய மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா'வை விவாதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் புதன்கிழமை வலியுறுத்தினர்.

குறிப்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குலாம் நபி ஆசாத் பேசுகையில், "மாநிலங்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை நிறைவேற்றவில்லையெனில், மக்களவையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (நாடாளுமன்ற கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைவதை மேற்கோள்காட்டினார்) அதை நிறைவேற்றுவது கடினம்; எனவே விவாதமின்றி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அந்த மசோதாவை உடனடியாக அவையில் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இதை மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் ஏற்றுக் கொண்டார். எனினும், அந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றுவதை அவர் விரும்பவில்லை. சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த உறுப்பினர்கள் விவாதத்தில் பேச வேண்டும் என்று குரியன் தெரிவித்தார்.

அதன்படி, உடனடிக் கேள்வி நேரத்தில் நேரத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. பிறகு, உணவு இடைவேளை நேரத்துக்குப் பிறகு அவை கூடியதும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைய 3 நாள்கள் மீதமிருந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பும், உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், 2014-ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதா கொண்டு வரப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவோருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்பட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment