FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, December 7, 2016

காதுகேளாத வாய்பேசாத பெண் கேட்கும் நீதி..... காதை பொத்திக் கொள்ளும் அரசு!

05.12.2016
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! ஆனால், அதிகார வர்க்கத்தினால், சீரழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சிறுமி ஒருவர் வருடக் கணக்காக நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிக் கிடக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்குகிறது.

வாய்பேசாத - காதுகேளாத சிறுமி !

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத - வாய்பேசாத சிறுமி அவள். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாற்றுத்திறன் சிறுமியை கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீசிவிட்டுச் சென்றது.

சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்களுடனும் சாலையோரத்தில் துடித்துக் கிடந்த மகளை அருகிலுள்ள வீரபத்ரா மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தூக்கிச் சென்றார் அவரது தந்தை. ஆனால், 'காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், நாங்கள் சிகிச்சைக்கு சேர்க்கமாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசாரோ அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு !


இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை சீரழித்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டசிறுமியின் தந்தை வீரபத்ரா, தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோன்று வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

அரசும் சமூகமும் நீதிகிடைக்காமல் இருக்கக் காரணம் ! 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், ''இதுவரையிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை'' என்று கவலை தெரிவிக்கிறார் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன்.

''சி.பி.சி.ஐ.டி ஒரு முறை மட்டுமே வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்கள். அதோடு இந்த வழக்கு நிற்கிறது. கோடகரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மகனும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்ன கொடுமைகள் இழைத்தாலும் கேட்க நாதியில்லை என்பதே இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக் காரணம். நாங்களும் பலமுறை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை'' என்று அலுத்துக்கொண்டார் நம்பிராஜன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் இந்த சமூகத்தின் சாடலால் மனம் வெதும்பி தனிமையில் தத்தளிக்கிறாள்.

எப்போது அவளுக்கு நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment