FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 7, 2016

காதுகேளாத வாய்பேசாத பெண் கேட்கும் நீதி..... காதை பொத்திக் கொள்ளும் அரசு!

05.12.2016
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! ஆனால், அதிகார வர்க்கத்தினால், சீரழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சிறுமி ஒருவர் வருடக் கணக்காக நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிக் கிடக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்குகிறது.

வாய்பேசாத - காதுகேளாத சிறுமி !

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத - வாய்பேசாத சிறுமி அவள். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாற்றுத்திறன் சிறுமியை கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீசிவிட்டுச் சென்றது.

சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்களுடனும் சாலையோரத்தில் துடித்துக் கிடந்த மகளை அருகிலுள்ள வீரபத்ரா மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தூக்கிச் சென்றார் அவரது தந்தை. ஆனால், 'காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், நாங்கள் சிகிச்சைக்கு சேர்க்கமாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசாரோ அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு !


இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை சீரழித்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டசிறுமியின் தந்தை வீரபத்ரா, தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோன்று வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

அரசும் சமூகமும் நீதிகிடைக்காமல் இருக்கக் காரணம் ! 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், ''இதுவரையிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை'' என்று கவலை தெரிவிக்கிறார் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன்.

''சி.பி.சி.ஐ.டி ஒரு முறை மட்டுமே வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்கள். அதோடு இந்த வழக்கு நிற்கிறது. கோடகரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மகனும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்ன கொடுமைகள் இழைத்தாலும் கேட்க நாதியில்லை என்பதே இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக் காரணம். நாங்களும் பலமுறை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை'' என்று அலுத்துக்கொண்டார் நம்பிராஜன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் இந்த சமூகத்தின் சாடலால் மனம் வெதும்பி தனிமையில் தத்தளிக்கிறாள்.

எப்போது அவளுக்கு நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment