FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, December 7, 2016

காதுகேளாத வாய்பேசாத பெண் கேட்கும் நீதி..... காதை பொத்திக் கொள்ளும் அரசு!

05.12.2016
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! ஆனால், அதிகார வர்க்கத்தினால், சீரழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சிறுமி ஒருவர் வருடக் கணக்காக நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிக் கிடக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்குகிறது.

வாய்பேசாத - காதுகேளாத சிறுமி !

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத - வாய்பேசாத சிறுமி அவள். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாற்றுத்திறன் சிறுமியை கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீசிவிட்டுச் சென்றது.

சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்களுடனும் சாலையோரத்தில் துடித்துக் கிடந்த மகளை அருகிலுள்ள வீரபத்ரா மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தூக்கிச் சென்றார் அவரது தந்தை. ஆனால், 'காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், நாங்கள் சிகிச்சைக்கு சேர்க்கமாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசாரோ அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு !


இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை சீரழித்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டசிறுமியின் தந்தை வீரபத்ரா, தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோன்று வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

அரசும் சமூகமும் நீதிகிடைக்காமல் இருக்கக் காரணம் ! 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், ''இதுவரையிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை'' என்று கவலை தெரிவிக்கிறார் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன்.

''சி.பி.சி.ஐ.டி ஒரு முறை மட்டுமே வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்கள். அதோடு இந்த வழக்கு நிற்கிறது. கோடகரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மகனும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்ன கொடுமைகள் இழைத்தாலும் கேட்க நாதியில்லை என்பதே இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக் காரணம். நாங்களும் பலமுறை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை'' என்று அலுத்துக்கொண்டார் நம்பிராஜன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் இந்த சமூகத்தின் சாடலால் மனம் வெதும்பி தனிமையில் தத்தளிக்கிறாள்.

எப்போது அவளுக்கு நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment