FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, December 2, 2016

மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை

02.12.2016, கரூர்,
மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உடலாலும், மனதாலும் வளம் குன்றியவர்களை புறந்தள்ளாமல் அவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டறிந்து அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டும். அந்த நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3–ம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

கல்வி

இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளியில் கொண்டு வந்து அதன் வாயிலாக அவர்களது வாழ்வில் ஏற்றம் தரத்தக்க வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாற்றுத்திறன் படைத்த மாணவ– மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறன் படைத்தவர்களின் திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment