FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 2, 2016

மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை

02.12.2016, கரூர்,
மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உடலாலும், மனதாலும் வளம் குன்றியவர்களை புறந்தள்ளாமல் அவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டறிந்து அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டும். அந்த நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3–ம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

கல்வி

இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளியில் கொண்டு வந்து அதன் வாயிலாக அவர்களது வாழ்வில் ஏற்றம் தரத்தக்க வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாற்றுத்திறன் படைத்த மாணவ– மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறன் படைத்தவர்களின் திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment