FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, December 2, 2016

மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை

02.12.2016, கரூர்,
மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உடலாலும், மனதாலும் வளம் குன்றியவர்களை புறந்தள்ளாமல் அவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டறிந்து அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டும். அந்த நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3–ம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

கல்வி

இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளியில் கொண்டு வந்து அதன் வாயிலாக அவர்களது வாழ்வில் ஏற்றம் தரத்தக்க வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாற்றுத்திறன் படைத்த மாணவ– மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறன் படைத்தவர்களின் திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment