FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, December 2, 2016

மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை

02.12.2016, கரூர்,
மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உடலாலும், மனதாலும் வளம் குன்றியவர்களை புறந்தள்ளாமல் அவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டறிந்து அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டும். அந்த நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3–ம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

கல்வி

இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளியில் கொண்டு வந்து அதன் வாயிலாக அவர்களது வாழ்வில் ஏற்றம் தரத்தக்க வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாற்றுத்திறன் படைத்த மாணவ– மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறன் படைத்தவர்களின் திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment