FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 14, 2015

வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

13.01.2015, ஓசூர்: 
தேன்கனிக்கோட்டை அருகே, பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முதலில் முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், தற்போது நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேரை கைது செய்தனர். இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, ஓசூர் நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment