FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, January 14, 2015

வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

13.01.2015, ஓசூர்: 
தேன்கனிக்கோட்டை அருகே, பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முதலில் முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், தற்போது நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேரை கைது செய்தனர். இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, ஓசூர் நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment