FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, January 14, 2015

வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

13.01.2015, ஓசூர்: 
தேன்கனிக்கோட்டை அருகே, பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முதலில் முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், தற்போது நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேரை கைது செய்தனர். இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, ஓசூர் நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment