FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 11, 2015

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

10.01.2015, சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்புகளால் இணைந்து நடத்தப்​பட்டது.
​​
​ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.

தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வர் பிரபு (நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர) பேசுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அனுதாபம் இல்லை. இந்த சமூகத்தின் ஊக்கம் மட்டுமே" என்று கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் ரமேஷ் அவர்களுடன் கிரிகெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளும் அங்கீகரிக்கப்பட்டனர்.

​சாதனையாளர்கள்​ பட்டியல்​: இரமேஷ் - கிரிக்கெட், வெங்கடேஷ் - கிரிக்கெட், குமார் - பண்பலை தொகுப்பாளார் (FM), மனோகரன் - ஜூடோ, மோனிஷா - ஜூடோ, விஜய சாந்தி - ஜூடோ, பாப்பாத்தி - ஜூடோ, விஜய் - பள்ளி கல்வி, அருள்ராஜ் - பள்ளி கல்வி, சுவர்ண லட்சுமி - சிறுவர் பாராளுமன்றம், சாய் கிருஷ்ணா விக்னேஷ் - பள்ளி கல்வி, சிவபிரகாஷ் - பள்ளி கல்வி ​

No comments:

Post a Comment