FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, January 11, 2015

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

10.01.2015, சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்புகளால் இணைந்து நடத்தப்​பட்டது.
​​
​ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.

தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வர் பிரபு (நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர) பேசுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அனுதாபம் இல்லை. இந்த சமூகத்தின் ஊக்கம் மட்டுமே" என்று கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் ரமேஷ் அவர்களுடன் கிரிகெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளும் அங்கீகரிக்கப்பட்டனர்.

​சாதனையாளர்கள்​ பட்டியல்​: இரமேஷ் - கிரிக்கெட், வெங்கடேஷ் - கிரிக்கெட், குமார் - பண்பலை தொகுப்பாளார் (FM), மனோகரன் - ஜூடோ, மோனிஷா - ஜூடோ, விஜய சாந்தி - ஜூடோ, பாப்பாத்தி - ஜூடோ, விஜய் - பள்ளி கல்வி, அருள்ராஜ் - பள்ளி கல்வி, சுவர்ண லட்சுமி - சிறுவர் பாராளுமன்றம், சாய் கிருஷ்ணா விக்னேஷ் - பள்ளி கல்வி, சிவபிரகாஷ் - பள்ளி கல்வி ​

No comments:

Post a Comment