FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, January 11, 2015

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

10.01.2015, சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்புகளால் இணைந்து நடத்தப்​பட்டது.
​​
​ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.

தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வர் பிரபு (நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர) பேசுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அனுதாபம் இல்லை. இந்த சமூகத்தின் ஊக்கம் மட்டுமே" என்று கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் ரமேஷ் அவர்களுடன் கிரிகெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளும் அங்கீகரிக்கப்பட்டனர்.

​சாதனையாளர்கள்​ பட்டியல்​: இரமேஷ் - கிரிக்கெட், வெங்கடேஷ் - கிரிக்கெட், குமார் - பண்பலை தொகுப்பாளார் (FM), மனோகரன் - ஜூடோ, மோனிஷா - ஜூடோ, விஜய சாந்தி - ஜூடோ, பாப்பாத்தி - ஜூடோ, விஜய் - பள்ளி கல்வி, அருள்ராஜ் - பள்ளி கல்வி, சுவர்ண லட்சுமி - சிறுவர் பாராளுமன்றம், சாய் கிருஷ்ணா விக்னேஷ் - பள்ளி கல்வி, சிவபிரகாஷ் - பள்ளி கல்வி ​

No comments:

Post a Comment