FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 6, 2015

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கு நவீன பரிசோதனை மையம்

06.01.2015, சேலம், :
சேலம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கான நவீன பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறாருக்கான பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் உட்பட 15மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் நவீன பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறியதாவது:
6வயதுக்கு உட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள சிறாருக்காக நவீன பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் ரூ.5.10லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமையவுள்ளது. செவிஒலி வெளிக்கொணர் பரிசோதனை, மூளை தண்டுவடம் மறுபதில் பரிசோதனைகள் இங்கு செய்யப்படும். அதோடு பேசுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
காதுக்கு வெளியில் உள்ள குறைபாடுகளை கண்டறிய ஏற்கனவே கருவிகள் உள்ளன. இந்த மையத்தில் உட்புற காதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 6வயதுக்கு உட்பட்ட சுமார் 50பேருக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment