FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, January 6, 2015

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கு நவீன பரிசோதனை மையம்

06.01.2015, சேலம், :
சேலம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கான நவீன பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறாருக்கான பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் உட்பட 15மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் நவீன பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறியதாவது:
6வயதுக்கு உட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள சிறாருக்காக நவீன பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் ரூ.5.10லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமையவுள்ளது. செவிஒலி வெளிக்கொணர் பரிசோதனை, மூளை தண்டுவடம் மறுபதில் பரிசோதனைகள் இங்கு செய்யப்படும். அதோடு பேசுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
காதுக்கு வெளியில் உள்ள குறைபாடுகளை கண்டறிய ஏற்கனவே கருவிகள் உள்ளன. இந்த மையத்தில் உட்புற காதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 6வயதுக்கு உட்பட்ட சுமார் 50பேருக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment