FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 6, 2015

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கு நவீன பரிசோதனை மையம்

06.01.2015, சேலம், :
சேலம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கான நவீன பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறாருக்கான பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் உட்பட 15மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் நவீன பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறியதாவது:
6வயதுக்கு உட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள சிறாருக்காக நவீன பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் ரூ.5.10லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமையவுள்ளது. செவிஒலி வெளிக்கொணர் பரிசோதனை, மூளை தண்டுவடம் மறுபதில் பரிசோதனைகள் இங்கு செய்யப்படும். அதோடு பேசுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
காதுக்கு வெளியில் உள்ள குறைபாடுகளை கண்டறிய ஏற்கனவே கருவிகள் உள்ளன. இந்த மையத்தில் உட்புற காதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 6வயதுக்கு உட்பட்ட சுமார் 50பேருக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment