FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, January 6, 2015

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கு நவீன பரிசோதனை மையம்

06.01.2015, சேலம், :
சேலம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கான நவீன பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறாருக்கான பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் உட்பட 15மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் நவீன பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறியதாவது:
6வயதுக்கு உட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள சிறாருக்காக நவீன பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் ரூ.5.10லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமையவுள்ளது. செவிஒலி வெளிக்கொணர் பரிசோதனை, மூளை தண்டுவடம் மறுபதில் பரிசோதனைகள் இங்கு செய்யப்படும். அதோடு பேசுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
காதுக்கு வெளியில் உள்ள குறைபாடுகளை கண்டறிய ஏற்கனவே கருவிகள் உள்ளன. இந்த மையத்தில் உட்புற காதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 6வயதுக்கு உட்பட்ட சுமார் 50பேருக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment