FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 9, 2015

மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் துவங்கிட கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கடனுதவி

08.01.2014, விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம், மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிதி ஒதுக்கீட்டுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயது வரை உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மிக குறைந்த அளவிலான 4 விழுக்காடு வட்டியில் சுய தொழில் வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. வங்கி கடன் பெற்ற மாற்றுத் திறனாளிகள், தொகையினை முறையாக செலுத்தும்பட்சத்தில், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியினை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டிதொகை இல்லாமல், சுய தொழில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கி கடனுதவி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கும், வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கடனுதவியை பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment