FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, January 9, 2015

மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் துவங்கிட கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கடனுதவி

08.01.2014, விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம், மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிதி ஒதுக்கீட்டுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயது வரை உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மிக குறைந்த அளவிலான 4 விழுக்காடு வட்டியில் சுய தொழில் வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. வங்கி கடன் பெற்ற மாற்றுத் திறனாளிகள், தொகையினை முறையாக செலுத்தும்பட்சத்தில், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியினை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டிதொகை இல்லாமல், சுய தொழில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கி கடனுதவி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கும், வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கடனுதவியை பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment