FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 4, 2015

ரயிலில் இருந்து குதித்தார் DEAF மாற்றுத்திறனாளி வாலிபர்! சிகிச்சை பலனின்றி பலி

04.01.2015, கோவை : கோவையில் ரயிலில் இருந்து குதித்த மாற்றுத்திறனாளி வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தராஜ், 24; மாற்றுத்திறனாளி. திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதில், பங்கேற்க கடந்த 30ம் தேதி நண்பர்களுடன், வாலிபர் சென்னை சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஜன., 1ம் தேதி இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் திருப்பூர் புறப்பட்டார். இவருடன் வந்த நண்பர், 2ம் தேதி அதிகாலை ஈரோட்டில் இறங்கினார். திருப்பூர் ரயில்நிலையத்தில் இறங்க கோவிந்தராஜ் காத்திருந்தார். அப்போது துாக்க கலக்கத்தில் இருந்தவர், திருப்பூரில் இறங்கவில்லை.

இந்நிலையில், திடீரென எழுந்து பார்த்தபோது, வடகோவை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. பதட்டமடைந்தவர், எதிர்திசையில் செல்லும் திருப்பூர் ரயிலை பிடிக்க, மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment