FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 4, 2015

ரயிலில் இருந்து குதித்தார் DEAF மாற்றுத்திறனாளி வாலிபர்! சிகிச்சை பலனின்றி பலி

04.01.2015, கோவை : கோவையில் ரயிலில் இருந்து குதித்த மாற்றுத்திறனாளி வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தராஜ், 24; மாற்றுத்திறனாளி. திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதில், பங்கேற்க கடந்த 30ம் தேதி நண்பர்களுடன், வாலிபர் சென்னை சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஜன., 1ம் தேதி இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் திருப்பூர் புறப்பட்டார். இவருடன் வந்த நண்பர், 2ம் தேதி அதிகாலை ஈரோட்டில் இறங்கினார். திருப்பூர் ரயில்நிலையத்தில் இறங்க கோவிந்தராஜ் காத்திருந்தார். அப்போது துாக்க கலக்கத்தில் இருந்தவர், திருப்பூரில் இறங்கவில்லை.

இந்நிலையில், திடீரென எழுந்து பார்த்தபோது, வடகோவை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. பதட்டமடைந்தவர், எதிர்திசையில் செல்லும் திருப்பூர் ரயிலை பிடிக்க, மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment