FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 4, 2015

ரயிலில் இருந்து குதித்தார் DEAF மாற்றுத்திறனாளி வாலிபர்! சிகிச்சை பலனின்றி பலி

04.01.2015, கோவை : கோவையில் ரயிலில் இருந்து குதித்த மாற்றுத்திறனாளி வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தராஜ், 24; மாற்றுத்திறனாளி. திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதில், பங்கேற்க கடந்த 30ம் தேதி நண்பர்களுடன், வாலிபர் சென்னை சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஜன., 1ம் தேதி இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் திருப்பூர் புறப்பட்டார். இவருடன் வந்த நண்பர், 2ம் தேதி அதிகாலை ஈரோட்டில் இறங்கினார். திருப்பூர் ரயில்நிலையத்தில் இறங்க கோவிந்தராஜ் காத்திருந்தார். அப்போது துாக்க கலக்கத்தில் இருந்தவர், திருப்பூரில் இறங்கவில்லை.

இந்நிலையில், திடீரென எழுந்து பார்த்தபோது, வடகோவை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. பதட்டமடைந்தவர், எதிர்திசையில் செல்லும் திருப்பூர் ரயிலை பிடிக்க, மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment