FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, January 20, 2015

மல்டி மீடியா, போட்டாகிராபி பயிற்சி; மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


20.01.2015, தூத்துக்குடி :
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மல்டி மீடியா, டிஜிட்டல் போட்டாகிராபி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்பில் மாற்றுதிறனாளிகளான, கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி பெறும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத பயிற்சி வழங்கப்படும். விடுதி வசதி தேவைப்படுபவர்கள் விடுதி வசதி வழங்கப்படும். பயிற்சியின் போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன., 23 க்குள், நேரில் சென்று கல்வித்தகுதி, மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பம் செய்யலாம், என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment