FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 20, 2015

மல்டி மீடியா, போட்டாகிராபி பயிற்சி; மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


20.01.2015, தூத்துக்குடி :
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மல்டி மீடியா, டிஜிட்டல் போட்டாகிராபி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்பில் மாற்றுதிறனாளிகளான, கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி பெறும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத பயிற்சி வழங்கப்படும். விடுதி வசதி தேவைப்படுபவர்கள் விடுதி வசதி வழங்கப்படும். பயிற்சியின் போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன., 23 க்குள், நேரில் சென்று கல்வித்தகுதி, மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பம் செய்யலாம், என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment