FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 20, 2015

சேலம் கலெக்டர் ஆஃபீஸில் காது கேளாதோருக்கு பரிசோதனை மையம்

20.01.2015, சேலம்: 
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.
சேலம், கலெக்டர் அலுவலகத்தின், தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அலுவலகம் உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சலுகைகளை பெற, இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், காதொலி கருவி, தையல் இயந்திரம், செயற்கை கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட காது கேளாதோர் பரிசோதனை மையம், தற்போது, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 5.10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கென சிறப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காது கேளாதோர் குறித்த விவரங்களை சேகரிப்பர். காது கேளாதோராக இருந்தால், அவர்களை, கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவர்.
பரிசோதனை செய்த பின், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு பரிசோதனை மையம், மிகுந்த பாதுகாப்புடன், குளிரூட்டும் சாதனத்துடன், வெளிசப்தம் உள்ளே நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில், இப்பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாற்றுத்திறனாளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment