FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, January 20, 2015

சேலம் கலெக்டர் ஆஃபீஸில் காது கேளாதோருக்கு பரிசோதனை மையம்

20.01.2015, சேலம்: 
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.
சேலம், கலெக்டர் அலுவலகத்தின், தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அலுவலகம் உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சலுகைகளை பெற, இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், காதொலி கருவி, தையல் இயந்திரம், செயற்கை கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட காது கேளாதோர் பரிசோதனை மையம், தற்போது, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 5.10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கென சிறப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காது கேளாதோர் குறித்த விவரங்களை சேகரிப்பர். காது கேளாதோராக இருந்தால், அவர்களை, கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவர்.
பரிசோதனை செய்த பின், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு பரிசோதனை மையம், மிகுந்த பாதுகாப்புடன், குளிரூட்டும் சாதனத்துடன், வெளிசப்தம் உள்ளே நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில், இப்பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாற்றுத்திறனாளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment