FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, January 20, 2015

சேலம் கலெக்டர் ஆஃபீஸில் காது கேளாதோருக்கு பரிசோதனை மையம்

20.01.2015, சேலம்: 
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.
சேலம், கலெக்டர் அலுவலகத்தின், தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அலுவலகம் உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சலுகைகளை பெற, இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், காதொலி கருவி, தையல் இயந்திரம், செயற்கை கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட காது கேளாதோர் பரிசோதனை மையம், தற்போது, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 5.10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கென சிறப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காது கேளாதோர் குறித்த விவரங்களை சேகரிப்பர். காது கேளாதோராக இருந்தால், அவர்களை, கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவர்.
பரிசோதனை செய்த பின், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு பரிசோதனை மையம், மிகுந்த பாதுகாப்புடன், குளிரூட்டும் சாதனத்துடன், வெளிசப்தம் உள்ளே நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில், இப்பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாற்றுத்திறனாளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment