FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, January 20, 2015

சேலம் கலெக்டர் ஆஃபீஸில் காது கேளாதோருக்கு பரிசோதனை மையம்

20.01.2015, சேலம்: 
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.
சேலம், கலெக்டர் அலுவலகத்தின், தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அலுவலகம் உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சலுகைகளை பெற, இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், காதொலி கருவி, தையல் இயந்திரம், செயற்கை கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட காது கேளாதோர் பரிசோதனை மையம், தற்போது, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 5.10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கென சிறப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காது கேளாதோர் குறித்த விவரங்களை சேகரிப்பர். காது கேளாதோராக இருந்தால், அவர்களை, கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவர்.
பரிசோதனை செய்த பின், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு பரிசோதனை மையம், மிகுந்த பாதுகாப்புடன், குளிரூட்டும் சாதனத்துடன், வெளிசப்தம் உள்ளே நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில், இப்பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாற்றுத்திறனாளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment