FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 6, 2015

DEAF பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவகுழு பரிசோதனைக்கு கோரிக்கை

05.01.2015, கிருஷ்ணகிரி: 
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்ரப்பா என்ற விவசாயியின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம் 25ம் தேதி, வாலிபர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சைகை மொழி தெரிந்த ஒரு பெண் அதிகாரியை உள்ளடக்கிய சிறப்புக்குழு மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்டமுகிலாளம் சாலையில் இருந்து, கொடகரை செல்லும் 13 கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.சிறுமியர் பாதிப்புக்கு ஆளாகும் மலை பகுதிகளை கொண்ட அஞ்செட்டியில், அரசின் சார்பில், பழங்குடியினர் நலத்துறை மூலம் உடனடியாக ஒரு உண்டு உறைவிடப்பள்ளியை துவங்க வேண்டும். அஞ்செட்டி பகுதியில் தொடர்ந்து சிறார்களுக்கு எதிராக நடந்து வரும் குற்ற செயல்களை தடுக்கவும், சமூக பொருளாதார நிலையில் மாற்றம் காணவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment