FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 6, 2015

DEAF பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவகுழு பரிசோதனைக்கு கோரிக்கை

05.01.2015, கிருஷ்ணகிரி: 
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்ரப்பா என்ற விவசாயியின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம் 25ம் தேதி, வாலிபர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சைகை மொழி தெரிந்த ஒரு பெண் அதிகாரியை உள்ளடக்கிய சிறப்புக்குழு மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்டமுகிலாளம் சாலையில் இருந்து, கொடகரை செல்லும் 13 கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.சிறுமியர் பாதிப்புக்கு ஆளாகும் மலை பகுதிகளை கொண்ட அஞ்செட்டியில், அரசின் சார்பில், பழங்குடியினர் நலத்துறை மூலம் உடனடியாக ஒரு உண்டு உறைவிடப்பள்ளியை துவங்க வேண்டும். அஞ்செட்டி பகுதியில் தொடர்ந்து சிறார்களுக்கு எதிராக நடந்து வரும் குற்ற செயல்களை தடுக்கவும், சமூக பொருளாதார நிலையில் மாற்றம் காணவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment