FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 6, 2015

DEAF பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவகுழு பரிசோதனைக்கு கோரிக்கை

05.01.2015, கிருஷ்ணகிரி: 
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்ரப்பா என்ற விவசாயியின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம் 25ம் தேதி, வாலிபர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சைகை மொழி தெரிந்த ஒரு பெண் அதிகாரியை உள்ளடக்கிய சிறப்புக்குழு மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்டமுகிலாளம் சாலையில் இருந்து, கொடகரை செல்லும் 13 கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.சிறுமியர் பாதிப்புக்கு ஆளாகும் மலை பகுதிகளை கொண்ட அஞ்செட்டியில், அரசின் சார்பில், பழங்குடியினர் நலத்துறை மூலம் உடனடியாக ஒரு உண்டு உறைவிடப்பள்ளியை துவங்க வேண்டும். அஞ்செட்டி பகுதியில் தொடர்ந்து சிறார்களுக்கு எதிராக நடந்து வரும் குற்ற செயல்களை தடுக்கவும், சமூக பொருளாதார நிலையில் மாற்றம் காணவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment