FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, January 6, 2015

DEAF பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவகுழு பரிசோதனைக்கு கோரிக்கை

05.01.2015, கிருஷ்ணகிரி: 
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்ரப்பா என்ற விவசாயியின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம் 25ம் தேதி, வாலிபர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சைகை மொழி தெரிந்த ஒரு பெண் அதிகாரியை உள்ளடக்கிய சிறப்புக்குழு மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்டமுகிலாளம் சாலையில் இருந்து, கொடகரை செல்லும் 13 கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.சிறுமியர் பாதிப்புக்கு ஆளாகும் மலை பகுதிகளை கொண்ட அஞ்செட்டியில், அரசின் சார்பில், பழங்குடியினர் நலத்துறை மூலம் உடனடியாக ஒரு உண்டு உறைவிடப்பள்ளியை துவங்க வேண்டும். அஞ்செட்டி பகுதியில் தொடர்ந்து சிறார்களுக்கு எதிராக நடந்து வரும் குற்ற செயல்களை தடுக்கவும், சமூக பொருளாதார நிலையில் மாற்றம் காணவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment