FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 14, 2015

பேச முடியாத பெண் பாலியல் பலாத்காரம்குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த கொடூரம்:'தீப்பெட்டி கூட தரக்கூடாது'

11.01.2015, ஓசூர்:
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த முத்தப்பா, 26, மாதப்பா, 22, ருத்தரப்பா, 22, சித்தலிங்கா, 23, என்ற நான்கு பேரை கைது செய்தனர்.நான்கு பேருக்கும் சாதகமாக செயல்பட்ட ஊர் தலைவர்கள் சிலர், சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தனர். வீரபத்திரப்பா புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபத்திரப்பா, புகார் மனுவில் கூறியுள்ளதாவது:என் குடும்பத்திற்கு, உப்பு, புளி, தீப்பெட்டி தரக்கூடாது என, அப்பகுதியில், கடை நடத்தி வரும் முருகனிடம் உத்தரவிட்டுள்ளனர். 'கைதான வாலிபர்கள், விடுதலையாகி வருவதற்குள், ஊரை விட்டு ஓடி விடுங்கள். இல்லாவிட்டால், அவர்களை விட்டு, உங்களை அடித்து, துரத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, மிரட்டுகின்றனர். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment