FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 14, 2015

பேச முடியாத பெண் பாலியல் பலாத்காரம்குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த கொடூரம்:'தீப்பெட்டி கூட தரக்கூடாது'

11.01.2015, ஓசூர்:
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த முத்தப்பா, 26, மாதப்பா, 22, ருத்தரப்பா, 22, சித்தலிங்கா, 23, என்ற நான்கு பேரை கைது செய்தனர்.நான்கு பேருக்கும் சாதகமாக செயல்பட்ட ஊர் தலைவர்கள் சிலர், சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தனர். வீரபத்திரப்பா புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபத்திரப்பா, புகார் மனுவில் கூறியுள்ளதாவது:என் குடும்பத்திற்கு, உப்பு, புளி, தீப்பெட்டி தரக்கூடாது என, அப்பகுதியில், கடை நடத்தி வரும் முருகனிடம் உத்தரவிட்டுள்ளனர். 'கைதான வாலிபர்கள், விடுதலையாகி வருவதற்குள், ஊரை விட்டு ஓடி விடுங்கள். இல்லாவிட்டால், அவர்களை விட்டு, உங்களை அடித்து, துரத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, மிரட்டுகின்றனர். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment