FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, January 14, 2015

பேச முடியாத பெண் பாலியல் பலாத்காரம்குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த கொடூரம்:'தீப்பெட்டி கூட தரக்கூடாது'

11.01.2015, ஓசூர்:
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த முத்தப்பா, 26, மாதப்பா, 22, ருத்தரப்பா, 22, சித்தலிங்கா, 23, என்ற நான்கு பேரை கைது செய்தனர்.நான்கு பேருக்கும் சாதகமாக செயல்பட்ட ஊர் தலைவர்கள் சிலர், சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தனர். வீரபத்திரப்பா புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபத்திரப்பா, புகார் மனுவில் கூறியுள்ளதாவது:என் குடும்பத்திற்கு, உப்பு, புளி, தீப்பெட்டி தரக்கூடாது என, அப்பகுதியில், கடை நடத்தி வரும் முருகனிடம் உத்தரவிட்டுள்ளனர். 'கைதான வாலிபர்கள், விடுதலையாகி வருவதற்குள், ஊரை விட்டு ஓடி விடுங்கள். இல்லாவிட்டால், அவர்களை விட்டு, உங்களை அடித்து, துரத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, மிரட்டுகின்றனர். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment