FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 23, 2015

மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம்: அரசுக்கு நோட்டீஸ்!

23.01.2014, சென்னை:
மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரப்பா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "காது கேட்காத, வாய்பேச முடியாத என்னுடைய 16 வயது மகளை கடந்த 25 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யாமல் சிகிச்சை வழங்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் போலீசில் புகார் செய்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இச்சம்பவத்தில் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து, இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment