FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, January 23, 2015

மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம்: அரசுக்கு நோட்டீஸ்!

23.01.2014, சென்னை:
மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரப்பா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "காது கேட்காத, வாய்பேச முடியாத என்னுடைய 16 வயது மகளை கடந்த 25 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யாமல் சிகிச்சை வழங்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் போலீசில் புகார் செய்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இச்சம்பவத்தில் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து, இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment