FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, January 2, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: நீண்ட போராட்டத்துக்கு பின் போலீஸ் வழக்குப்பதிவு

31.12.2014, ஓசூர்:
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை, நான்கு வாலிபர்கள், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்ய போலீசார் முதலில் மறுத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வழக்கு பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த, 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு, வீரபத்திரப்பா காவல் இருந்தார். அவருக்கு உணவு வழங்கி விட்டு, அவரது மகள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த கீழ்கொச்சாவூரை சேர்ந்த, வீரபத்திரன் மகன் முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த பசப்பா மகன் மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த மாதப்பா மகன் ருத்ரப்பா, 22, பசப்பா மகன் சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேரும், சிறுமியின் கையை பிடித்து இழுத்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில், வாலிபர்கள் கட்டையால் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை, நான்கு பேரும், அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்து விடுதாக மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த சிறுமி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. கடந்த, 26ம் தேதி காலை, சிறுமியின் உடையில் அதிகளவு ரத்தம் இருந்ததை கவனித்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். ஆனால், சிறுமி சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் சியாமளா, சிறுமியிடம் பேசி நடந்ததை அறிந்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யுமாறு கூறி, அஞ்செட்டி போலீசார், அவரை திருப்பி அனுப்பி விட்டனர். தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸில் புகார் செய்தபோது, அவர்கள் முதலில் புகாரை ஏற்க மறுத்தனர். ஆனால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையிட்டதால், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். நான்கு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றத்திறனாளி சிறுமிக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment