FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, January 2, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: நீண்ட போராட்டத்துக்கு பின் போலீஸ் வழக்குப்பதிவு

31.12.2014, ஓசூர்:
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை, நான்கு வாலிபர்கள், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்ய போலீசார் முதலில் மறுத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வழக்கு பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த, 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு, வீரபத்திரப்பா காவல் இருந்தார். அவருக்கு உணவு வழங்கி விட்டு, அவரது மகள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த கீழ்கொச்சாவூரை சேர்ந்த, வீரபத்திரன் மகன் முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த பசப்பா மகன் மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த மாதப்பா மகன் ருத்ரப்பா, 22, பசப்பா மகன் சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேரும், சிறுமியின் கையை பிடித்து இழுத்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில், வாலிபர்கள் கட்டையால் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை, நான்கு பேரும், அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்து விடுதாக மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த சிறுமி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. கடந்த, 26ம் தேதி காலை, சிறுமியின் உடையில் அதிகளவு ரத்தம் இருந்ததை கவனித்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். ஆனால், சிறுமி சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் சியாமளா, சிறுமியிடம் பேசி நடந்ததை அறிந்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யுமாறு கூறி, அஞ்செட்டி போலீசார், அவரை திருப்பி அனுப்பி விட்டனர். தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸில் புகார் செய்தபோது, அவர்கள் முதலில் புகாரை ஏற்க மறுத்தனர். ஆனால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையிட்டதால், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். நான்கு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றத்திறனாளி சிறுமிக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment