FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, September 19, 2015

தாட்கோ திட்டங்கள் மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

 
சென்னை : 15 September 2015
தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்களிலிருந்து கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம் வாங்க, தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்க, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருந்துக்கடை, மருத்துவமனை, இரத்த பரிசோதனை நிலையம் அமைக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, சுழல் நிதி, ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மகளிர் மற்றும் ஆண்கள் கலப்பு சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ்), முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல்நிலைத் தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் என்ற http://application.tahdco.com இணையதள முகவரிக்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20/- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment