FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, September 19, 2015

தாட்கோ திட்டங்கள் மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

 
சென்னை : 15 September 2015
தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்களிலிருந்து கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம் வாங்க, தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்க, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருந்துக்கடை, மருத்துவமனை, இரத்த பரிசோதனை நிலையம் அமைக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, சுழல் நிதி, ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மகளிர் மற்றும் ஆண்கள் கலப்பு சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ்), முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல்நிலைத் தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் என்ற http://application.tahdco.com இணையதள முகவரிக்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20/- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment