FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, September 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படும் வாகன ஓட்டுநர் உரிமம்

கோவை, 09 September 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து துறையினர் மறுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

 கடந்த 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி கோவை மாவட்டத்தில் சுமார் 1.14 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள மாற்றுத் திறனாளிகளில் 15 ஆயிரம் பேர் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வகை மாற்றம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு வாகனங்களை இயங்கி வருபவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு ஆகியவற்றை வழங்க வட்டார போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் வாகனங்களுக்கு மட்டும் வாகனப் பதிவு செய்யப்படுகிறது.

 பொதுவாக, இருசக்கர வாகனங்களை இயக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் பதிவு செய்வதற்கு முன்பாக வாகனத்தை வகை மாற்றம் செய்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் சான்று பெற்று பதிவு செய்தால் அவர்களுக்கு சாலை வரி மற்றும் மத்திய கலால் வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.ஆனால், உரிய அரசாணை இருந்தும் வகை மாற்றம் செய்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து துறையினர் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

 இதேபோல, கால் செயலிழந்து நிலையில், கைகள் முழுமையாக இயக்கக் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மருத்துவர் ஆகியோர் சான்று அளித்தாலும் ஓட்டுநர் உரிமம் வழங்க வட்டார போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர்.

 இதில், வகை மாற்றம் செய்யப்பட்ட வாகனத்தை கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் மாற்றுத்திறனாளிகள் இயக்க முடியுமா என்பது குறித்து மட்டுமே வட்டாரப் போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

 ஆனால், மருத்துவர்கள் சான்று அளித்த பின்னரும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ ரீதியாக வாகனங்களை இயக்க முடியாது என கூறி ஓட்டுநர் உரிமம் வழங்க மறுக்கின்றனர்.

 இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் ஒரிருவர் தவிர ஆயிரக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

சென்னையில் மட்டும்

சாத்தியமா?: சென்னை வட்டாரப் போக்குவரத்து துறையினர், உரிய மருத்துவச் சான்று அளிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மட்டுமின்றி, வாகனங்களையும் பதிவு செய்து தருகின்றனர். இதே மாற்றுத்திறனாளிகளுக்கு, கோவை வட்டாரப் போக்குவரத்து துறையினர் சான்று வழங்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்தில் சிக்கினால் காப்பீடு கோர முடியாது: தனிநபர் காப்பீடு செய்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கினால் எவ்வித இழப்பீட்டுத் தொகையும் கோர முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:

 தமிழக அரசு அரசாணை குறித்து உரிய சுற்றறிக்கை வழங்கியும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம் வழங்கவும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக ஓட்டுநர் உரிமம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

 மருத்துவர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்த குழு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
_Dinamani

No comments:

Post a Comment