FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 29, 2015

காதுகேளாதோர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் பெற்றோர் கண்டு ரசிப்பு

27.09.2015, சாஸ்திரி நகர்: 
உலக காது கேளாதோர் தினத்தையொட்டி, சாஸ்திரி நகர், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளியில், நேற்று, உலக காதுகேளாதோர் தின விழா கொண்டாடப்பட்டது.
தற்போது பயிலும், காதுகேளாத குழந்தைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வரைந்த ஓவியம், கலை வண்ண பொருட்கள், பாடம் கற்பிக்கும் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், பிறந்து 45 நாளில் இருந்து 3 வயது வரை உள்ள காதுகேளாத குழந்தைகளே சேர்க்கப்படுகின்றனர். அங்கு, செய்கை மொழியில் பாடம் நடத்துவதில்லை. வாயால் பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், பொது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment