FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 29, 2015

காதுகேளாதோர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் பெற்றோர் கண்டு ரசிப்பு

27.09.2015, சாஸ்திரி நகர்: 
உலக காது கேளாதோர் தினத்தையொட்டி, சாஸ்திரி நகர், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளியில், நேற்று, உலக காதுகேளாதோர் தின விழா கொண்டாடப்பட்டது.
தற்போது பயிலும், காதுகேளாத குழந்தைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வரைந்த ஓவியம், கலை வண்ண பொருட்கள், பாடம் கற்பிக்கும் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், பிறந்து 45 நாளில் இருந்து 3 வயது வரை உள்ள காதுகேளாத குழந்தைகளே சேர்க்கப்படுகின்றனர். அங்கு, செய்கை மொழியில் பாடம் நடத்துவதில்லை. வாயால் பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், பொது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment