FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, September 29, 2015

காதுகேளாதோர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் பெற்றோர் கண்டு ரசிப்பு

27.09.2015, சாஸ்திரி நகர்: 
உலக காது கேளாதோர் தினத்தையொட்டி, சாஸ்திரி நகர், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளியில், நேற்று, உலக காதுகேளாதோர் தின விழா கொண்டாடப்பட்டது.
தற்போது பயிலும், காதுகேளாத குழந்தைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வரைந்த ஓவியம், கலை வண்ண பொருட்கள், பாடம் கற்பிக்கும் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், பிறந்து 45 நாளில் இருந்து 3 வயது வரை உள்ள காதுகேளாத குழந்தைகளே சேர்க்கப்படுகின்றனர். அங்கு, செய்கை மொழியில் பாடம் நடத்துவதில்லை. வாயால் பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், பொது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment