FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, September 27, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல், 26 September 2015
மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி, நூதன முறையில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற இளம் பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்எம்காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி(40). இவரது சகோதரி உமா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில், சகோதரி உமாவை வீட்டில் வைத்துவிட்டு, செல்வக்குமாரி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாராம்.

அப்போது, ரீட்டா(30) என்ற இளம் பெண் செல்வக்குமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபகுதியில் குடியிருந்த ரீட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கெனவே பழகியவர் என்பதால், ரீட்டாவை வரவேற்ற உமா, அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு, உடை சரி செய்ய வேண்டும் என ரீட்டா தெரிவித்தாராம்.

வீட்டிலிருந்த மற்றொரு அறையை உமா காட்டியுள்ளார். அங்கு சென்ற ரீட்டா பீரோவிலிருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியேறிவிட்டாராம். வெளியே சென்றிருந்த செல்வக்குமாரி வீட்டிற்கு திரும்பிய போது, பீரோவிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து செல்வக்குமாரி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment