FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, September 27, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல், 26 September 2015
மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி, நூதன முறையில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற இளம் பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்எம்காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி(40). இவரது சகோதரி உமா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில், சகோதரி உமாவை வீட்டில் வைத்துவிட்டு, செல்வக்குமாரி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாராம்.

அப்போது, ரீட்டா(30) என்ற இளம் பெண் செல்வக்குமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபகுதியில் குடியிருந்த ரீட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கெனவே பழகியவர் என்பதால், ரீட்டாவை வரவேற்ற உமா, அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு, உடை சரி செய்ய வேண்டும் என ரீட்டா தெரிவித்தாராம்.

வீட்டிலிருந்த மற்றொரு அறையை உமா காட்டியுள்ளார். அங்கு சென்ற ரீட்டா பீரோவிலிருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியேறிவிட்டாராம். வெளியே சென்றிருந்த செல்வக்குமாரி வீட்டிற்கு திரும்பிய போது, பீரோவிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து செல்வக்குமாரி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment