FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, September 27, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல், 26 September 2015
மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி, நூதன முறையில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற இளம் பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்எம்காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி(40). இவரது சகோதரி உமா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில், சகோதரி உமாவை வீட்டில் வைத்துவிட்டு, செல்வக்குமாரி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாராம்.

அப்போது, ரீட்டா(30) என்ற இளம் பெண் செல்வக்குமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபகுதியில் குடியிருந்த ரீட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கெனவே பழகியவர் என்பதால், ரீட்டாவை வரவேற்ற உமா, அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு, உடை சரி செய்ய வேண்டும் என ரீட்டா தெரிவித்தாராம்.

வீட்டிலிருந்த மற்றொரு அறையை உமா காட்டியுள்ளார். அங்கு சென்ற ரீட்டா பீரோவிலிருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியேறிவிட்டாராம். வெளியே சென்றிருந்த செல்வக்குமாரி வீட்டிற்கு திரும்பிய போது, பீரோவிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து செல்வக்குமாரி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment