FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, September 27, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல், 26 September 2015
மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி, நூதன முறையில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற இளம் பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்எம்காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி(40). இவரது சகோதரி உமா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில், சகோதரி உமாவை வீட்டில் வைத்துவிட்டு, செல்வக்குமாரி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாராம்.

அப்போது, ரீட்டா(30) என்ற இளம் பெண் செல்வக்குமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபகுதியில் குடியிருந்த ரீட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கெனவே பழகியவர் என்பதால், ரீட்டாவை வரவேற்ற உமா, அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு, உடை சரி செய்ய வேண்டும் என ரீட்டா தெரிவித்தாராம்.

வீட்டிலிருந்த மற்றொரு அறையை உமா காட்டியுள்ளார். அங்கு சென்ற ரீட்டா பீரோவிலிருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியேறிவிட்டாராம். வெளியே சென்றிருந்த செல்வக்குமாரி வீட்டிற்கு திரும்பிய போது, பீரோவிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து செல்வக்குமாரி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment