FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 28, 2015

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலத்தை மேம்படுத்தும் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு தாட்கோ கடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனை, முடநீக்க மையம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ்.,பி.பி.டி., பி.பாம், டி.பாம்., லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் சென்டர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் வழங்கப்படும்.

இருபாலரும், ஆண்கள் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழு, திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். இந்திய குடிமைப்பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்க்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணைய தளமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் வசதிக்காக தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment