FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, September 28, 2015

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலத்தை மேம்படுத்தும் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு தாட்கோ கடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனை, முடநீக்க மையம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ்.,பி.பி.டி., பி.பாம், டி.பாம்., லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் சென்டர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் வழங்கப்படும்.

இருபாலரும், ஆண்கள் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழு, திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். இந்திய குடிமைப்பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்க்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணைய தளமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் வசதிக்காக தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment