FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, September 28, 2015

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலத்தை மேம்படுத்தும் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு தாட்கோ கடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனை, முடநீக்க மையம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ்.,பி.பி.டி., பி.பாம், டி.பாம்., லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் சென்டர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் வழங்கப்படும்.

இருபாலரும், ஆண்கள் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழு, திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். இந்திய குடிமைப்பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்க்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணைய தளமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் வசதிக்காக தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment