FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, September 28, 2015

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலத்தை மேம்படுத்தும் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு தாட்கோ கடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனை, முடநீக்க மையம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ்.,பி.பி.டி., பி.பாம், டி.பாம்., லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் சென்டர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் வழங்கப்படும்.

இருபாலரும், ஆண்கள் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழு, திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். இந்திய குடிமைப்பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்க்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணைய தளமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் வசதிக்காக தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment