FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, September 23, 2015

சுயதொழில் கடனுதவி திட்ட முகாம்:மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூர், 21 September 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்குவதற்காக நடைபெறும் முகாம்களில் தகுதியுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 - 45 வயது வரை உள்ள உடலியக்க குறைபாடு உடையோர், பார்வையற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேசாத படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அவர்களின் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்க தமிழக அரசு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையத்தால் 3 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வரும் 22-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதியும், கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791, மாவட்ட தொழில் மையம் தொலைபேசி எண் 04362-255318 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment