FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, September 23, 2015

சுயதொழில் கடனுதவி திட்ட முகாம்:மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூர், 21 September 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்குவதற்காக நடைபெறும் முகாம்களில் தகுதியுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 - 45 வயது வரை உள்ள உடலியக்க குறைபாடு உடையோர், பார்வையற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேசாத படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அவர்களின் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்க தமிழக அரசு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையத்தால் 3 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வரும் 22-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதியும், கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791, மாவட்ட தொழில் மையம் தொலைபேசி எண் 04362-255318 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment