FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, September 23, 2015

சுயதொழில் கடனுதவி திட்ட முகாம்:மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூர், 21 September 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்குவதற்காக நடைபெறும் முகாம்களில் தகுதியுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 - 45 வயது வரை உள்ள உடலியக்க குறைபாடு உடையோர், பார்வையற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேசாத படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அவர்களின் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்க தமிழக அரசு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையத்தால் 3 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வரும் 22-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதியும், கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791, மாவட்ட தொழில் மையம் தொலைபேசி எண் 04362-255318 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment