FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, September 14, 2015

தபால் துறையில் தபால்காரர் பணி


இந்திய தபால் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய தபால்துறை மிகப்பழமையானது. நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட எல்லா இடங் களிலும் ஏராளமான கிளைகளுடன் தபால் துறை செயல்பட்டு வருகிறது.

தற்போது தபால்துறை மற்றும் ரெயில்வே தபால் சேவை பிரிவுகளில் தபால்காரர்/மெயில் கார்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

கல்வித் தகுதி:

தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெயில்கார்டு பணிக்கு மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100-ம், தேர்வுக்கட்டணமாக ரூ.400-ம் சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை தபால் அலுவலகங்களிலோ, மின்னணு முறையிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தபால் பிரிவின் தபால்காரர் பணி அல்லது ரெயில்வே மெயில்கார்டு பணி இரண்டில் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். 10-ம் வகுப்பு சான்றிதழ் எண் தகவலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் அதையும் தயாராக வைத்துக் கொள்ளவும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:


இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 4-10-15

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 7-10-15

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment