FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, September 14, 2015

தபால் துறையில் தபால்காரர் பணி


இந்திய தபால் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய தபால்துறை மிகப்பழமையானது. நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட எல்லா இடங் களிலும் ஏராளமான கிளைகளுடன் தபால் துறை செயல்பட்டு வருகிறது.

தற்போது தபால்துறை மற்றும் ரெயில்வே தபால் சேவை பிரிவுகளில் தபால்காரர்/மெயில் கார்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

கல்வித் தகுதி:

தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெயில்கார்டு பணிக்கு மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100-ம், தேர்வுக்கட்டணமாக ரூ.400-ம் சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை தபால் அலுவலகங்களிலோ, மின்னணு முறையிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தபால் பிரிவின் தபால்காரர் பணி அல்லது ரெயில்வே மெயில்கார்டு பணி இரண்டில் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். 10-ம் வகுப்பு சான்றிதழ் எண் தகவலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் அதையும் தயாராக வைத்துக் கொள்ளவும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:


இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 4-10-15

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 7-10-15

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment