FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 14, 2015

தபால் துறையில் தபால்காரர் பணி


இந்திய தபால் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய தபால்துறை மிகப்பழமையானது. நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட எல்லா இடங் களிலும் ஏராளமான கிளைகளுடன் தபால் துறை செயல்பட்டு வருகிறது.

தற்போது தபால்துறை மற்றும் ரெயில்வே தபால் சேவை பிரிவுகளில் தபால்காரர்/மெயில் கார்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

கல்வித் தகுதி:

தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெயில்கார்டு பணிக்கு மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100-ம், தேர்வுக்கட்டணமாக ரூ.400-ம் சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை தபால் அலுவலகங்களிலோ, மின்னணு முறையிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தபால் பிரிவின் தபால்காரர் பணி அல்லது ரெயில்வே மெயில்கார்டு பணி இரண்டில் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். 10-ம் வகுப்பு சான்றிதழ் எண் தகவலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் அதையும் தயாராக வைத்துக் கொள்ளவும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:


இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 4-10-15

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 7-10-15

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment