FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 4, 2015

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் வரவேற்பு

02.09.2015, புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற உத்தரவை மத்திய அரசு முறையாக செயல்படுத்துவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கில் நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி.ரமணா நேற்று அளித்த தீர்ப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் பிப்ரவரிக்குள் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment