FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 4, 2015

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் வரவேற்பு

02.09.2015, புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற உத்தரவை மத்திய அரசு முறையாக செயல்படுத்துவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கில் நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி.ரமணா நேற்று அளித்த தீர்ப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் பிப்ரவரிக்குள் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment