FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, September 23, 2015

DEAF கீதா டில்லியில் அடைக்கலம்?

15.09.2015, புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவிற்கு, டில்லியில், அடைக்கலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செய்துள்ளது.

இதுகுறித்து, இந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மையத்தில், கீதா, 23, தங்க வைக்கப்படுவார். காது கேளாத, வாய் பேச இயலாத கீதாவிற்கு, சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கோரி, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய எல்லைக் கிராமம் ஒன்றில் வசித்த கீதா, 4 வயதில், தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவரை, அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, பராமரித்து வருவதுடன், பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய தரப்பில், வெளியுறவு துறை அமைச்சகம், கீதாவை, அவரது பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பங்கள், கீதாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. 

No comments:

Post a Comment