FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 23, 2015

DEAF கீதா டில்லியில் அடைக்கலம்?

15.09.2015, புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவிற்கு, டில்லியில், அடைக்கலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செய்துள்ளது.

இதுகுறித்து, இந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மையத்தில், கீதா, 23, தங்க வைக்கப்படுவார். காது கேளாத, வாய் பேச இயலாத கீதாவிற்கு, சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கோரி, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய எல்லைக் கிராமம் ஒன்றில் வசித்த கீதா, 4 வயதில், தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவரை, அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, பராமரித்து வருவதுடன், பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய தரப்பில், வெளியுறவு துறை அமைச்சகம், கீதாவை, அவரது பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பங்கள், கீதாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. 

No comments:

Post a Comment