FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, September 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

11.09.2015, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் துக்காப்பேட்டை சகாயமாத மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமன் வரவேற்றார். மருத்துவ முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், குழந்தைகள் நலன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வரங்கன், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகி, முருகன், அன்புக்கரசி, சிறப்பு ஆசிரியர்கள் மாசிலாமணி, வெங்கடேசன், செல்வகுமாரி, சத்யா, தசைப் பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment