FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

11.09.2015, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் துக்காப்பேட்டை சகாயமாத மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமன் வரவேற்றார். மருத்துவ முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், குழந்தைகள் நலன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வரங்கன், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகி, முருகன், அன்புக்கரசி, சிறப்பு ஆசிரியர்கள் மாசிலாமணி, வெங்கடேசன், செல்வகுமாரி, சத்யா, தசைப் பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment