FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

11.09.2015, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் துக்காப்பேட்டை சகாயமாத மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமன் வரவேற்றார். மருத்துவ முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், குழந்தைகள் நலன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வரங்கன், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகி, முருகன், அன்புக்கரசி, சிறப்பு ஆசிரியர்கள் மாசிலாமணி, வெங்கடேசன், செல்வகுமாரி, சத்யா, தசைப் பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment