FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, September 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

11.09.2015, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் துக்காப்பேட்டை சகாயமாத மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமன் வரவேற்றார். மருத்துவ முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், குழந்தைகள் நலன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வரங்கன், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகி, முருகன், அன்புக்கரசி, சிறப்பு ஆசிரியர்கள் மாசிலாமணி, வெங்கடேசன், செல்வகுமாரி, சத்யா, தசைப் பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment