FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, September 12, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி

11.09.2015, திருவள்ளூர்: 
திருவள்ளூரில் இயங்கி வரும் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி துவக்க விழா ஈக்காடு ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.இதற்கு வசந்தம் கூட்டமைப்பின் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன மேலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். ‘ஹெல்ப் யூ’ அறக்கட்டளையின் திட்ட அலுவலர் கருணாநிதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் பங்கேற்று பயிற்சியை தொடக்கி வைத்தார்.இந்தப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். தொண்டு நிறுவன அலுவலர் பழனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment