FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 14, 2015

நவ.22ல் நுழைவுத்தேர்வு ஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சி : அக்.6க்குள் விண்ணப்பிக்கலாம்

11.09.2015, ராமநாதபுரம்: ஐஏஎஸ் தேர்விற்கான பயிற்சி மைய நுழைவுத்தேர்விற்கு அக்டோபர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில், இந்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்க வரும் நவம்பர் 22ல் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 6 முதல் வழங்கப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2016 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 32 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆகியோர் 35 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் 37 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில் சேர தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பாண்டிச்சேரி உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களைப் பெற எழுத்துப்பூர்வமான மனுவுடன் கல்வி, வயது, இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடைசி நாளான வரும் அக்டோபர் 6 மாலை 5.45 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment