FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 14, 2015

நவ.22ல் நுழைவுத்தேர்வு ஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சி : அக்.6க்குள் விண்ணப்பிக்கலாம்

11.09.2015, ராமநாதபுரம்: ஐஏஎஸ் தேர்விற்கான பயிற்சி மைய நுழைவுத்தேர்விற்கு அக்டோபர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில், இந்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்க வரும் நவம்பர் 22ல் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 6 முதல் வழங்கப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2016 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 32 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆகியோர் 35 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் 37 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில் சேர தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பாண்டிச்சேரி உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களைப் பெற எழுத்துப்பூர்வமான மனுவுடன் கல்வி, வயது, இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடைசி நாளான வரும் அக்டோபர் 6 மாலை 5.45 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment