FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, July 17, 2018

மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம் - 17 காட்டுமிராண்டிகளுக்கும் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு!


17.07.2018, சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பல மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்த 17 காட்டுமிராண்டுகளுக்கும் ஆதரவாக வழக்கஞறிர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் தொழிலதிபர்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள், வசதியானவர்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 செக் போஸ்டுகள், 25க்கும் மேற்பட்ட காவலாளிகள், 50 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கத்தியைக்காட்டி மிரட்டியும், மயக்கு ஊசி செலுத்தியும், போதை மாத்திரைகள் கொடுத்தும் கடந்த 6 மாதங்களாக 17 பேர் கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை சென்னை நகரத்தையே அதிர வைத்திருக்கிறது.

சிறுமியின் உடலில் உள்ள தழும்புகள், வெட்டுக்காயங்களை கண்டு திடுக்கிட்ட சகோதரியிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதையடுத்து போலீசாரிடம் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில், மொட்டை மாடியையும், காலியாக இருந்த வீடுகளையும் சோதனையிட்டபோது ஆணுறைகள், போதை ஊசி மருந்துகள் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள் ரவிக்குமார்(60), முருகேசன்(54), ஜெய்கணேஷ்(23), பாபு(36), பழனி (40), தீனதயாளன்(50), அபிஷேக்(23), சுகுமாறன்(60), இரால் பிரகாஷ்(58), ராஜா(32), சூர்யா(23), சுரேஷ்(32), ஜெயராம்(26), ராஜசேகர்(40), குணசேகர்(55), உமாபதி(42), சீனிவாசன்(45) 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் 17 பேரையும் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டபோது ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு 17 பேரையும் கடுமையாக தாக்கினர். போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும், போலிசாரின் வலியுறுத்தலின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் பால.கனகராஜ் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கறிஞர்கள் குற்றாவாளிகளை தாக்குவதை நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன்,

’’சென்னை அயனாவரம் பகுதியில் சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் பலாத்கார கொடுமை நிகழ்ந்துள்ளது. இன்றைய தினம் குற்றவாளிகளை கைது செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளுக்கு எதிர்ப்பை காட்டினர். இந்த எதிர்ப்பானது இதுவரை காணாத கடுமையான எதிர்ப்பாகும். ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் கூடி இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கில் ஆஜர் ஆகக்கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவானது தமிழகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும்.

சிறிது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மன்னிக்கவே முடியாதது. 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஜாமின் வழங்கக்கூடாது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கும் ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள். 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞராவது ஆஜர் ஆனால் அவர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்’’ என்று தெரிவித்தது அங்கே ஆத்திரத்துடன் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

No comments:

Post a Comment