FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, July 19, 2018

17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்

 198.07.2018
சென்னை: சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச இயலாத சிறுமியை சீரழித்த 17 பேரையும் தூக்கிட்டு கொல்லுங்கள் என்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை, சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு லிப்டில் வரும் போது லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.

இதையடுத்து மற்றவர்களையும் அழைத்து சிறுமியை நாசம் செய்துள்ளான். இதுபோல் சிறுமியை 7 மாதங்களாக 17 பேர் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் 17 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 

அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது அவர்கள் கூறுகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment