FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, July 19, 2018

17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்

 198.07.2018
சென்னை: சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச இயலாத சிறுமியை சீரழித்த 17 பேரையும் தூக்கிட்டு கொல்லுங்கள் என்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை, சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு லிப்டில் வரும் போது லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.

இதையடுத்து மற்றவர்களையும் அழைத்து சிறுமியை நாசம் செய்துள்ளான். இதுபோல் சிறுமியை 7 மாதங்களாக 17 பேர் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் 17 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 

அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது அவர்கள் கூறுகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment