FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, July 19, 2018

17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்

 198.07.2018
சென்னை: சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச இயலாத சிறுமியை சீரழித்த 17 பேரையும் தூக்கிட்டு கொல்லுங்கள் என்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை, சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு லிப்டில் வரும் போது லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.

இதையடுத்து மற்றவர்களையும் அழைத்து சிறுமியை நாசம் செய்துள்ளான். இதுபோல் சிறுமியை 7 மாதங்களாக 17 பேர் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் 17 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 

அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது அவர்கள் கூறுகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment