FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 17, 2018

குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்?: மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்
அந்தக் கேள்வியை
மற்றொரு முறை
அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள்
தினமும் இதுதான் நடக்கிறது
தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள்
பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன

குழந்தைகளின் மாமிசங்களை
வேட்டையாடுபவர்கள் யார்?

அவர்கள் குழந்தைகளிடம்
அன்பு காட்டுகிறவர்கள்
குழந்தைகளின்
விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள்
குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர்கள்
குழந்தைகளின் தனிமையை போக்குகிறவர்கள்
அந்தக் குழந்தைகளை
அத்தனை கனிவாய் அணைத்துக்கொள்கிறவர்கக்
அவர்கள்தான் பிறகு
அந்தக் குழந்தைகளை
கழிவறைக்குள் அழைத்துச் சென்று
அவர்கள் ஆடைகளை
சிரித்துக்கொண்டே கழற்றுகிறார்கள்

குழந்தைகள்
தம் மாமிசங்களை புசிக்க வருபவர்களை
ஒரு நாளும் சந்தேகிப்பதில்லை
தினமும் அவர்களுக்கு
குட்மார்னிங் சொல்கிறார்கள்
குட் ஈவ்னிங் சொல்கிறார்கள்
அவர்களிடம் தங்கள் பள்ளியின்
வேடிக்கைகளை சொல்கிறார்கள்
தங்கள் பிறந்த நாள் கேக்குகளை
முதலில் அவர்களுக்கு ஊட்டுகிறார்கள்
தின்பண்டங்களை
ஒளித்துகொண்டு வந்து தருகிறார்கள்
” அங்கிள்
அண்ணா
தாத்தா
மாமா ” என
எத்தனையோ
உரிமையுள்ள பெயர்களால்
அழைக்கிறார்கள்
ஒரு அண்ணா
ஒரு சிறுமியைபுணர
ஒரு அங்கிளை அழைத்துவருகிறான்
ஒரு அங்கிள் ஒரு தாத்தாவோடு
ஒரு பழைய சாமான் அறைக்குள்
அந்தச் சிறுமியை அழைத்துச் செல்கிறான்
ஒரு மாமா அச்சிறுமி புணரப்படுவதை
செல்போன் கேமிராவில் படமெடுக்கிறான்
பிறகு அந்தப்படம் அந்தச்சிறுமிக்கு
காட்டப்படுகிறது

எல்லாம் எங்கோ தொலைவில் நடக்கவில்லை
ஒரு காது கேளாத சிறுமியை
அவளது வீட்டிலேயே
அவளது பெற்றோர் கண்ணில் படாமல்
இருபத்திரெண்டு பேர்
ஏழு மாதங்களாக புணர்கிறார்கள்
நமக்கு அருகாமையில்தான் நடக்கிறது
அடுத்த ஊரில் நடக்கிறது
அடுத்த தெருவில் நடக்கிறது
அடுத்த வீட்டில் நடக்கிறது
அடுத்த அறையில் நடக்கிறது
நம் அறையிலேயே கூட நடக்கிறது
சிறு விசும்பல்கூட கேட்தில்லை
சிறு அலறல்கூட கேட்பதில்லை

அந்தச் சிறுமியைபோல
கடைசி நிமிடம் வரை
நாமும் காதுகேளாதவர்களாகத்தான் இருக்கிறோம்
பிறகு யாரோ சிலரை கல்லால் அடிக்கவேண்டும் என்று சொல்கிறோம்
இந்த உலகமே சீக்கிரம் ஒரு நாள்
ரத்தகறையுள்ள
கற்களால் நிரம்பிவிடும்

இந்த உலகம் ஏன் இவ்வளவு
வெட்டவெளியாய் இருக்கிறது?
ஒரு குழந்தை பாதுகாப்பாய் ஒளிந்துகொள்ள
ஒரு சிறிய மறைவிடத்தைகூடவா
நம்மால் உருவாக்க முடியவில்லை?

குழந்தைகளிடம் அன்பு செலுத்தும்
ஒவ்வொரு மனிதனையும் கண்டு நான் சஞ்சலமடைகிறேன்
குழந்தைகளை பிரியமாய் தொடும்
ஒவ்வொரு கரத்தையும் நான் சந்தேகிக்கிறேன்
எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
குழந்தைகளின் நம்பிக்கைக்குரியவர்களால்
இருட்டறைகளில் புணரப்படும்
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளின்
தீனக்குரல்கள் தலைக்குள் வெடிக்கின்றன

எனக்கு ஒரு அவசர வேலை இருக்கிறது
ஐந்து நிமிடங்கள்
ஐந்தே ஐந்து நிமிடங்கள்
என் குழந்தையை எங்கே விட்டுச் செல்வேன்?
யாரின் கைகளில் அவள் பாதுகாப்பாய் இருப்பாள்?

17.7.2018
மாலை 6.59
மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment