FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, July 18, 2018

சென்னை சிறுமி பலாத்கார வழக்கு... 17 பேருக்கு ஆண்மை டெஸ்ட் செய்ய போலீஸ் முடிவு


18.07.2018, சென்னை: சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

சென்னை அயனாவரம் செகரடேரியட் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். காது கேளாத மாணவியான இவரை இவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டின் லிப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்தனர்.

இதனால் வயிற்றில் ஏற்பட்ட வலியால் மருத்துவமனைக்கு சென்றபோது இந்த விவகாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் 17 பேரை கைது செய்தனர். 

அவர்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் அம்சங்கள் ஏதும் இல்லாத ஆண்கள் என்பதற்கே தகுதியில்லாத இந்த மிருகங்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்து காலத்தை விரயம் செய்யாமல் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment