FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, July 18, 2018

சென்னை சிறுமி பலாத்கார வழக்கு... 17 பேருக்கு ஆண்மை டெஸ்ட் செய்ய போலீஸ் முடிவு


18.07.2018, சென்னை: சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

சென்னை அயனாவரம் செகரடேரியட் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். காது கேளாத மாணவியான இவரை இவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டின் லிப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்தனர்.

இதனால் வயிற்றில் ஏற்பட்ட வலியால் மருத்துவமனைக்கு சென்றபோது இந்த விவகாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் 17 பேரை கைது செய்தனர். 

அவர்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் அம்சங்கள் ஏதும் இல்லாத ஆண்கள் என்பதற்கே தகுதியில்லாத இந்த மிருகங்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்து காலத்தை விரயம் செய்யாமல் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment