FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, July 28, 2018

மனுஷி சில்லாரை விடுங்க! 'மிஸ் ஏசியா' வாகை சூடிய தேஷ்னா ஜெயின் தெரியுமா?

27.07.2018
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த மனுஷி சில்லாரைப் போல் ஆசிய அளவிலான அழகி போட்டியில் வாகை சூடிய தேஷ்னா ஜெயின் என்ற இந்திய அழகி பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய பிரதேச மாநிலம் டிகம் நகரை சேர்ந்தவர் தேஷ்னா ஜெயின். இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார். பின்னர் தைவான் நாட்டில் 2016ம் ஆண்டு நடைபெற்ற காதுகேளாதோருக்கான 'மிஸ் இண்டர்நேஷனல்' போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த வரிசையில், காதுகேளாதோருக்கான 'மிஸ் ஏசியா' பட்டம் பெற்று இந்தியாவுக்கு தற்போது பெருமை தேடி தந்துள்ளார்.

ஆனால் இவரது இத்தகைய சாதனை குறித்து யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர் புகழின் உச்சிக்கு சென்றார். எல்லா கேமரா கண்களும் அவரை படம் பிடித்தன. எல்லா மீடியாவும் அவரது பேட்டியை ஒளிபரப்பின.

ஆனால் காது கேளாதோர் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டுமுறை உலக அங்கீகாரம் பெற்ற தேஸ்னா ஜெயின் பற்றி சாதாரண செய்தி என்ற அளவில் தான் ஊடகங்கள் பேசின.

இந்நிலையில், காதுகேளாதோருக்கான மிஸ் ஏசியா பட்டம் வென்றது குறித்து பேசியிருக்கு தேஷ்னா,

20 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் பங்கேற்ற போது எனக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்னை விட அழகாக இருந்தனர். என்னைவிட மிகவும் நேர்த்தியாகவும் உடையணிந்திருந்தனர். திறமையானவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.

No comments:

Post a Comment