FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, July 28, 2018

மனுஷி சில்லாரை விடுங்க! 'மிஸ் ஏசியா' வாகை சூடிய தேஷ்னா ஜெயின் தெரியுமா?

27.07.2018
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த மனுஷி சில்லாரைப் போல் ஆசிய அளவிலான அழகி போட்டியில் வாகை சூடிய தேஷ்னா ஜெயின் என்ற இந்திய அழகி பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய பிரதேச மாநிலம் டிகம் நகரை சேர்ந்தவர் தேஷ்னா ஜெயின். இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார். பின்னர் தைவான் நாட்டில் 2016ம் ஆண்டு நடைபெற்ற காதுகேளாதோருக்கான 'மிஸ் இண்டர்நேஷனல்' போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த வரிசையில், காதுகேளாதோருக்கான 'மிஸ் ஏசியா' பட்டம் பெற்று இந்தியாவுக்கு தற்போது பெருமை தேடி தந்துள்ளார்.

ஆனால் இவரது இத்தகைய சாதனை குறித்து யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர் புகழின் உச்சிக்கு சென்றார். எல்லா கேமரா கண்களும் அவரை படம் பிடித்தன. எல்லா மீடியாவும் அவரது பேட்டியை ஒளிபரப்பின.

ஆனால் காது கேளாதோர் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டுமுறை உலக அங்கீகாரம் பெற்ற தேஸ்னா ஜெயின் பற்றி சாதாரண செய்தி என்ற அளவில் தான் ஊடகங்கள் பேசின.

இந்நிலையில், காதுகேளாதோருக்கான மிஸ் ஏசியா பட்டம் வென்றது குறித்து பேசியிருக்கு தேஷ்னா,

20 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் பங்கேற்ற போது எனக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்னை விட அழகாக இருந்தனர். என்னைவிட மிகவும் நேர்த்தியாகவும் உடையணிந்திருந்தனர். திறமையானவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.

No comments:

Post a Comment