FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, July 28, 2018

மனுஷி சில்லாரை விடுங்க! 'மிஸ் ஏசியா' வாகை சூடிய தேஷ்னா ஜெயின் தெரியுமா?

27.07.2018
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த மனுஷி சில்லாரைப் போல் ஆசிய அளவிலான அழகி போட்டியில் வாகை சூடிய தேஷ்னா ஜெயின் என்ற இந்திய அழகி பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய பிரதேச மாநிலம் டிகம் நகரை சேர்ந்தவர் தேஷ்னா ஜெயின். இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார். பின்னர் தைவான் நாட்டில் 2016ம் ஆண்டு நடைபெற்ற காதுகேளாதோருக்கான 'மிஸ் இண்டர்நேஷனல்' போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த வரிசையில், காதுகேளாதோருக்கான 'மிஸ் ஏசியா' பட்டம் பெற்று இந்தியாவுக்கு தற்போது பெருமை தேடி தந்துள்ளார்.

ஆனால் இவரது இத்தகைய சாதனை குறித்து யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர் புகழின் உச்சிக்கு சென்றார். எல்லா கேமரா கண்களும் அவரை படம் பிடித்தன. எல்லா மீடியாவும் அவரது பேட்டியை ஒளிபரப்பின.

ஆனால் காது கேளாதோர் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டுமுறை உலக அங்கீகாரம் பெற்ற தேஸ்னா ஜெயின் பற்றி சாதாரண செய்தி என்ற அளவில் தான் ஊடகங்கள் பேசின.

இந்நிலையில், காதுகேளாதோருக்கான மிஸ் ஏசியா பட்டம் வென்றது குறித்து பேசியிருக்கு தேஷ்னா,

20 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் பங்கேற்ற போது எனக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்னை விட அழகாக இருந்தனர். என்னைவிட மிகவும் நேர்த்தியாகவும் உடையணிந்திருந்தனர். திறமையானவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.

No comments:

Post a Comment