FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, July 28, 2018

மனுஷி சில்லாரை விடுங்க! 'மிஸ் ஏசியா' வாகை சூடிய தேஷ்னா ஜெயின் தெரியுமா?

27.07.2018
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த மனுஷி சில்லாரைப் போல் ஆசிய அளவிலான அழகி போட்டியில் வாகை சூடிய தேஷ்னா ஜெயின் என்ற இந்திய அழகி பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய பிரதேச மாநிலம் டிகம் நகரை சேர்ந்தவர் தேஷ்னா ஜெயின். இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார். பின்னர் தைவான் நாட்டில் 2016ம் ஆண்டு நடைபெற்ற காதுகேளாதோருக்கான 'மிஸ் இண்டர்நேஷனல்' போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த வரிசையில், காதுகேளாதோருக்கான 'மிஸ் ஏசியா' பட்டம் பெற்று இந்தியாவுக்கு தற்போது பெருமை தேடி தந்துள்ளார்.

ஆனால் இவரது இத்தகைய சாதனை குறித்து யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர் புகழின் உச்சிக்கு சென்றார். எல்லா கேமரா கண்களும் அவரை படம் பிடித்தன. எல்லா மீடியாவும் அவரது பேட்டியை ஒளிபரப்பின.

ஆனால் காது கேளாதோர் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டுமுறை உலக அங்கீகாரம் பெற்ற தேஸ்னா ஜெயின் பற்றி சாதாரண செய்தி என்ற அளவில் தான் ஊடகங்கள் பேசின.

இந்நிலையில், காதுகேளாதோருக்கான மிஸ் ஏசியா பட்டம் வென்றது குறித்து பேசியிருக்கு தேஷ்னா,

20 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் பங்கேற்ற போது எனக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்னை விட அழகாக இருந்தனர். என்னைவிட மிகவும் நேர்த்தியாகவும் உடையணிந்திருந்தனர். திறமையானவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.

No comments:

Post a Comment