FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, July 17, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்: காதுகேளாதோர் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் மனு

16.07.2018, சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரே‌ஷன் கார்டு கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், காவல் துறை மனுக்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் தொடர்பான மனுக்கள் என 308 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மானாமதுரையில் ஓடும் ரெயிலில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணை கற்பழித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதேபோன்று திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களால் மாற்றுத்திறனாளிகள் தங்களை காப்பாற்றி கொள்வது என்பது கடினமாகிவிட்டது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்வம் கொடுத்த மனுவில், நாட்டரசன்கோட்டையில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றிலும் 15 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நடைபெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளுக்கு சிவகங்கையில் இருந்து தான் போலீசார் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நாட்டரசன்கோட்டையில் புதிதாக ஒரு போலீஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment