FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, July 17, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்: காதுகேளாதோர் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் மனு

16.07.2018, சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரே‌ஷன் கார்டு கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், காவல் துறை மனுக்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் தொடர்பான மனுக்கள் என 308 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மானாமதுரையில் ஓடும் ரெயிலில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணை கற்பழித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதேபோன்று திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களால் மாற்றுத்திறனாளிகள் தங்களை காப்பாற்றி கொள்வது என்பது கடினமாகிவிட்டது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்வம் கொடுத்த மனுவில், நாட்டரசன்கோட்டையில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றிலும் 15 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நடைபெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளுக்கு சிவகங்கையில் இருந்து தான் போலீசார் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நாட்டரசன்கோட்டையில் புதிதாக ஒரு போலீஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment