FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, July 17, 2018

வாய் பேச முடியாத & காது கேளாத மாற்றுத் திறனாளியிடம் கொள்ளை: சைகையில் கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொள்ளையர்கள்!

17.07.2018
சென்னை வளசரவாக்கத்தில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி இளைஞரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் ரங்கேஷ். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், போரூரில் உள்ள உணவகத்தில் பார்சல் கட்டித் தரும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.

வழக்கமாக உணவகத்தில் பணிமுடிந்து நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில்தான் ரங்கேஷ் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் ரங்கேஷின் கழுத்தில் மின் வயரால் இறுக்கி தாக்கியுள்ளனர். இதனால் அச்சத்தில் ரங்கேஷ் வாகனத்தை நிறுத்தியபோது 4 பேரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வாய் பேச முடியாத ரங்கேஷ், சைகை மூலம் அவர்களிடம் அழுது புலம்பியபோதும், துளியும் இரக்கமின்றி கொள்ளையர்கள் அவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 4 பேரும் முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ரங்கேஷ் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment