FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, July 17, 2018

வாய் பேச முடியாத & காது கேளாத மாற்றுத் திறனாளியிடம் கொள்ளை: சைகையில் கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொள்ளையர்கள்!

17.07.2018
சென்னை வளசரவாக்கத்தில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி இளைஞரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் ரங்கேஷ். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், போரூரில் உள்ள உணவகத்தில் பார்சல் கட்டித் தரும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.

வழக்கமாக உணவகத்தில் பணிமுடிந்து நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில்தான் ரங்கேஷ் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் ரங்கேஷின் கழுத்தில் மின் வயரால் இறுக்கி தாக்கியுள்ளனர். இதனால் அச்சத்தில் ரங்கேஷ் வாகனத்தை நிறுத்தியபோது 4 பேரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வாய் பேச முடியாத ரங்கேஷ், சைகை மூலம் அவர்களிடம் அழுது புலம்பியபோதும், துளியும் இரக்கமின்றி கொள்ளையர்கள் அவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 4 பேரும் முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ரங்கேஷ் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment