FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, July 3, 2018

காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதாவுக்கு நடந்த சுயம்வரம்; 2 மாப்பிள்ளைகள் தேர்வு

02.07.2018
இந்துார் : பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண் கீதாவுக்கு திருமணம் செய்ய நடந்த சுயம்வரத்தில், இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரை பிரிந்து, 9வது வயதில், ரயில் ஏறி, பாகிஸ்தான் நாட்டின் லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, அங்குள்ள தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்தார். அந்த சிறுமிக்கு, கீதா என, பெயரிட்டார்.

மத்திய அரசின் நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பிய கீதா, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், தன் பெற்றோரை தேடி வருகிறார். தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.

பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார். இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கீதாவை திருமணம் செய்ய, விருப்பம் தெரிவித்தவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது. இந்த, 25 பேரும், கீதாவை சந்திக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த, தலா ஒருவரை, கீதா தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், கீதா மனநிலை மற்றும் உளவியல் ரீதியாக சரியான பின், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என, அவரது பாதுகாவலரான ஞானேந்திர புரோஹித் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு பேரில், யாரையாவது ஒருவரை, கீதா, தேர்வு செய்வதற்காக, மீண்டும் சுயம்வரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment