FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, July 3, 2018

காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதாவுக்கு நடந்த சுயம்வரம்; 2 மாப்பிள்ளைகள் தேர்வு

02.07.2018
இந்துார் : பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண் கீதாவுக்கு திருமணம் செய்ய நடந்த சுயம்வரத்தில், இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரை பிரிந்து, 9வது வயதில், ரயில் ஏறி, பாகிஸ்தான் நாட்டின் லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, அங்குள்ள தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்தார். அந்த சிறுமிக்கு, கீதா என, பெயரிட்டார்.

மத்திய அரசின் நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பிய கீதா, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், தன் பெற்றோரை தேடி வருகிறார். தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.

பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார். இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கீதாவை திருமணம் செய்ய, விருப்பம் தெரிவித்தவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது. இந்த, 25 பேரும், கீதாவை சந்திக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த, தலா ஒருவரை, கீதா தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், கீதா மனநிலை மற்றும் உளவியல் ரீதியாக சரியான பின், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என, அவரது பாதுகாவலரான ஞானேந்திர புரோஹித் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு பேரில், யாரையாவது ஒருவரை, கீதா, தேர்வு செய்வதற்காக, மீண்டும் சுயம்வரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment