FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 23, 2018

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி


23, 2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி காமக்கொடூரர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தமிழ்நாடு ஆண்-பெண் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் நல சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் அம்புரோஸ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் விவேக் மேத்யூ, டேராகனி, சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின்போது ‘இந்த மண்ணில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம்’ உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாற்றுத்திறனாளிகள் ஏந்தி சென்றனர்.

பேரணி குறித்து சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த துயரம் கொடுமையிலும் கொடுமையானது. அந்த சிறுமிக்கு என்றைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. ஒன்றும் அறியாத சிறுமியை பல மாதங்களாக சிதைத்து வந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கு தண்டனையும், அதன்மூலம் அந்த சிறுமிக்கு நீதியும் கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதற்கு இந்த கண்டன பேரணி ஒரு தொடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment