FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 23, 2018

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி


23, 2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி காமக்கொடூரர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தமிழ்நாடு ஆண்-பெண் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் நல சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் அம்புரோஸ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் விவேக் மேத்யூ, டேராகனி, சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின்போது ‘இந்த மண்ணில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம்’ உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாற்றுத்திறனாளிகள் ஏந்தி சென்றனர்.

பேரணி குறித்து சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த துயரம் கொடுமையிலும் கொடுமையானது. அந்த சிறுமிக்கு என்றைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. ஒன்றும் அறியாத சிறுமியை பல மாதங்களாக சிதைத்து வந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கு தண்டனையும், அதன்மூலம் அந்த சிறுமிக்கு நீதியும் கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதற்கு இந்த கண்டன பேரணி ஒரு தொடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment