FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 23, 2018

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி


23, 2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி காமக்கொடூரர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தமிழ்நாடு ஆண்-பெண் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் நல சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் அம்புரோஸ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் விவேக் மேத்யூ, டேராகனி, சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின்போது ‘இந்த மண்ணில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம்’ உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாற்றுத்திறனாளிகள் ஏந்தி சென்றனர்.

பேரணி குறித்து சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த துயரம் கொடுமையிலும் கொடுமையானது. அந்த சிறுமிக்கு என்றைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. ஒன்றும் அறியாத சிறுமியை பல மாதங்களாக சிதைத்து வந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கு தண்டனையும், அதன்மூலம் அந்த சிறுமிக்கு நீதியும் கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதற்கு இந்த கண்டன பேரணி ஒரு தொடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment