FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, July 23, 2018

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி


23, 2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி காமக்கொடூரர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தமிழ்நாடு ஆண்-பெண் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் நல சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் அம்புரோஸ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் விவேக் மேத்யூ, டேராகனி, சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின்போது ‘இந்த மண்ணில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம்’ உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாற்றுத்திறனாளிகள் ஏந்தி சென்றனர்.

பேரணி குறித்து சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த துயரம் கொடுமையிலும் கொடுமையானது. அந்த சிறுமிக்கு என்றைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. ஒன்றும் அறியாத சிறுமியை பல மாதங்களாக சிதைத்து வந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கு தண்டனையும், அதன்மூலம் அந்த சிறுமிக்கு நீதியும் கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதற்கு இந்த கண்டன பேரணி ஒரு தொடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment