FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, July 14, 2018

அப்பொழுதே "மைனரை" கட் செய்திருந்தால், பாலியல் வல்லுறவு, கொலை நடந்திருக்காது!!!

13.07.2018
மூன்று வருடங்களாக வக்கிர புத்தி கொண்ட ஊர் மைனர் ஒருவன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட, "அபராதத்தை" மட்டும் விதித்து அவனைத் தப்பிக்க விட்டிருக்கின்றது ஆலமரத்து பஞ்சாயத்து. அப்பொழுதே அந்த "மைனரை" கட் செய்திருந்தால் இப்பொழுது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியை பாலியல் வல்லுறவாகி உயிரை இழந்திருக்கமாட்டாளே.!" என வாய்மூடி மௌனியாக சோகத்தில் இருக்கின்றது சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகிலுள்ள அச்சரம்பட்டி கிராமம்.

செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 1 மணி வேளையில், அக்கம் பக்கத்தார் குரல் கொடுக்க அரைகுறை நிர்வாணத்துடன், தலையிலிருந்து ரத்தம் ஓடி நின்ற நிலையில் குளிக்க சென்ற புதர் மறைவிலேயே பிணமாக கிடந்திருக்கின்றார் வாய் பேசமுடியாத 17 வயது சிறுமியான அழகுதேவி.

நூறு நாள் வேலைக்கு சென்ற அம்மா கருப்பாயிக்கும், விவசாய கூலிக்கு சென்ற அழகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுர சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல்துறைக் சுண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வினை நடத்த, டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட கொலையாளி அருகிலுள்ள "மைனர்" மாணிக்கமே என உறுதி செய்யப்பட்டான். சரியாக இரவு 11 மணிக்கு கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே, கொலையாளியிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கி அவனை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

"சம்பவத்தினத்தன்று காலையிலேயே அழகாபுரி ஊருக்கு சென்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது இந்த சிறுமி குளிப்பதற்காக செல்ல, மதுபோதையில் இருந்த நான் அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கிவிட்டேன். அலங்கோல ஆடைகளுடன் இருந்த அவர் எப்படியும் என்னை அடையாளம் காட்டிவிடுவார் என எண்ணி அருகிலிருந்த இரும்புக் கம்பிக் கொண்டு தலையில் அடித்துக் கொன்று விட்டேன்." என ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கிய கொலையாளி "மைனர்" மாணிக்கத்திற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முன்பு இதே கிராமத்தில் இது போல் பாலியல் சீண்டல் செய்ய, ஊரில் பெரிய குடும்பம் என்பதால் ஆலமரத்து பஞ்சாயத்து அபராதம் மட்டும் "மைனரை" தப்பிக்கவிட்டது. "தப்பு செய்தான். அது தான் "மைனரை" சுட்டுட்டேன்." என திரைப்படத்தில் நடிகர் விவேக் செய்தது போல் அப்பொழுதே போலீஸிடம் இவனை ஒப்படைத்திருந்தால் அந்த சிறுமிக்கு இந்த நிலை வந்திருக்காது.!

No comments:

Post a Comment