FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, July 14, 2018

அப்பொழுதே "மைனரை" கட் செய்திருந்தால், பாலியல் வல்லுறவு, கொலை நடந்திருக்காது!!!

13.07.2018
மூன்று வருடங்களாக வக்கிர புத்தி கொண்ட ஊர் மைனர் ஒருவன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட, "அபராதத்தை" மட்டும் விதித்து அவனைத் தப்பிக்க விட்டிருக்கின்றது ஆலமரத்து பஞ்சாயத்து. அப்பொழுதே அந்த "மைனரை" கட் செய்திருந்தால் இப்பொழுது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியை பாலியல் வல்லுறவாகி உயிரை இழந்திருக்கமாட்டாளே.!" என வாய்மூடி மௌனியாக சோகத்தில் இருக்கின்றது சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகிலுள்ள அச்சரம்பட்டி கிராமம்.

செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 1 மணி வேளையில், அக்கம் பக்கத்தார் குரல் கொடுக்க அரைகுறை நிர்வாணத்துடன், தலையிலிருந்து ரத்தம் ஓடி நின்ற நிலையில் குளிக்க சென்ற புதர் மறைவிலேயே பிணமாக கிடந்திருக்கின்றார் வாய் பேசமுடியாத 17 வயது சிறுமியான அழகுதேவி.

நூறு நாள் வேலைக்கு சென்ற அம்மா கருப்பாயிக்கும், விவசாய கூலிக்கு சென்ற அழகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுர சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல்துறைக் சுண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வினை நடத்த, டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட கொலையாளி அருகிலுள்ள "மைனர்" மாணிக்கமே என உறுதி செய்யப்பட்டான். சரியாக இரவு 11 மணிக்கு கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே, கொலையாளியிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கி அவனை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

"சம்பவத்தினத்தன்று காலையிலேயே அழகாபுரி ஊருக்கு சென்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது இந்த சிறுமி குளிப்பதற்காக செல்ல, மதுபோதையில் இருந்த நான் அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கிவிட்டேன். அலங்கோல ஆடைகளுடன் இருந்த அவர் எப்படியும் என்னை அடையாளம் காட்டிவிடுவார் என எண்ணி அருகிலிருந்த இரும்புக் கம்பிக் கொண்டு தலையில் அடித்துக் கொன்று விட்டேன்." என ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கிய கொலையாளி "மைனர்" மாணிக்கத்திற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முன்பு இதே கிராமத்தில் இது போல் பாலியல் சீண்டல் செய்ய, ஊரில் பெரிய குடும்பம் என்பதால் ஆலமரத்து பஞ்சாயத்து அபராதம் மட்டும் "மைனரை" தப்பிக்கவிட்டது. "தப்பு செய்தான். அது தான் "மைனரை" சுட்டுட்டேன்." என திரைப்படத்தில் நடிகர் விவேக் செய்தது போல் அப்பொழுதே போலீஸிடம் இவனை ஒப்படைத்திருந்தால் அந்த சிறுமிக்கு இந்த நிலை வந்திருக்காது.!

No comments:

Post a Comment