FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, July 28, 2018

செவித்திறன் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரம் 7 மாதமாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் மறைத்தது எப்படி?

27.07.2018
சென்னை: செவித்திறன் பாதித்த சிறுமியை கடந்த 7 மாதங்களாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்தது எப்படி என்று 17 பேரிடமும் போலீசார் விடியவிடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, 7 மாதங்களாக போதை மாத்திரை, மயக்க ஊசிகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. போலீசார் இதுதொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.பின்னர் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, குற்றவாளிகள் 17 பேரையும் கடந்த புதன் கிழமை புழல் சிறைக்குள் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.

அதைதொடர்ந்து, குற்றவாளிகள் 17 ேபரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அயனாவரம் மகளிர் போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் 17 பேரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களாக எப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தீர்கள். சம்பவம் குறித்து சிறுமியின் ெபற்றோருக்கு தெரியுமா, தெரியாதா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்துப் பூர்வமாகவும் போலீசார் பதிவு செய்தனர். மேலும், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 ேபர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment