FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, July 28, 2018

செவித்திறன் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரம் 7 மாதமாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் மறைத்தது எப்படி?

27.07.2018
சென்னை: செவித்திறன் பாதித்த சிறுமியை கடந்த 7 மாதங்களாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்தது எப்படி என்று 17 பேரிடமும் போலீசார் விடியவிடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, 7 மாதங்களாக போதை மாத்திரை, மயக்க ஊசிகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. போலீசார் இதுதொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.பின்னர் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, குற்றவாளிகள் 17 பேரையும் கடந்த புதன் கிழமை புழல் சிறைக்குள் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.

அதைதொடர்ந்து, குற்றவாளிகள் 17 ேபரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அயனாவரம் மகளிர் போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் 17 பேரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களாக எப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தீர்கள். சம்பவம் குறித்து சிறுமியின் ெபற்றோருக்கு தெரியுமா, தெரியாதா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்துப் பூர்வமாகவும் போலீசார் பதிவு செய்தனர். மேலும், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 ேபர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment