FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 28, 2018

செவித்திறன் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரம் 7 மாதமாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் மறைத்தது எப்படி?

27.07.2018
சென்னை: செவித்திறன் பாதித்த சிறுமியை கடந்த 7 மாதங்களாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்தது எப்படி என்று 17 பேரிடமும் போலீசார் விடியவிடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, 7 மாதங்களாக போதை மாத்திரை, மயக்க ஊசிகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. போலீசார் இதுதொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.பின்னர் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, குற்றவாளிகள் 17 பேரையும் கடந்த புதன் கிழமை புழல் சிறைக்குள் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.

அதைதொடர்ந்து, குற்றவாளிகள் 17 ேபரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அயனாவரம் மகளிர் போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் 17 பேரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களாக எப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தீர்கள். சம்பவம் குறித்து சிறுமியின் ெபற்றோருக்கு தெரியுமா, தெரியாதா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்துப் பூர்வமாகவும் போலீசார் பதிவு செய்தனர். மேலும், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 ேபர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment