FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, July 28, 2018

செவித்திறன் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரம் 7 மாதமாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் மறைத்தது எப்படி?

27.07.2018
சென்னை: செவித்திறன் பாதித்த சிறுமியை கடந்த 7 மாதங்களாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்தது எப்படி என்று 17 பேரிடமும் போலீசார் விடியவிடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, 7 மாதங்களாக போதை மாத்திரை, மயக்க ஊசிகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. போலீசார் இதுதொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.பின்னர் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, குற்றவாளிகள் 17 பேரையும் கடந்த புதன் கிழமை புழல் சிறைக்குள் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.

அதைதொடர்ந்து, குற்றவாளிகள் 17 ேபரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அயனாவரம் மகளிர் போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் 17 பேரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களாக எப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தீர்கள். சம்பவம் குறித்து சிறுமியின் ெபற்றோருக்கு தெரியுமா, தெரியாதா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்துப் பூர்வமாகவும் போலீசார் பதிவு செய்தனர். மேலும், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 ேபர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment