FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, December 5, 2018

1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

04.12.2018, திருச்சி,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் 1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

இதில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 50 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட 217 பேருக்கு நவீன காதொலி கருவிகள், கால்கள் துண்டிக்கப்பட்ட 10 பேருக்கு செயற்கை கால்கள், 2 கால்களும் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பார்வையற்ற 8 பேருக்கு பிரெய்லி கைக்கெடிகாரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக விழா நடைபெற்ற இடத்தில் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று மாலை திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 2,006 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment