FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, December 5, 2018

1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

04.12.2018, திருச்சி,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் 1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

இதில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 50 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட 217 பேருக்கு நவீன காதொலி கருவிகள், கால்கள் துண்டிக்கப்பட்ட 10 பேருக்கு செயற்கை கால்கள், 2 கால்களும் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பார்வையற்ற 8 பேருக்கு பிரெய்லி கைக்கெடிகாரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக விழா நடைபெற்ற இடத்தில் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று மாலை திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 2,006 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment