FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 21, 2018

எம்.ஜி.ஆர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி

சென்னை, டிச. 20–
பிரசாந்தி முதியோர் நலவாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜியின் தாய் லட்சுமி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தையொட்டி அன்னதானம், நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லம் மற்றும் ஸ்ரீ சீரடி பர்த்தி சாய் லஷ்மி டிரஸ்டின் டிரஸ்டி ராஜகோபால பாலாஜி்யின் அம்மா லஷ்மி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு பள்ளியில் உள்ள 400 மாணவ–மாணவியருக்கு அன்னதானம், பழம் மற்றும் பிஸ்ட் ஆகியவற்றை ராஜகோபால பாலாஜி வழங்கினார்.

ராமாவரம் தோட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 25 ஆயிரம் ரூபாயை ராஜகோபால பாலாஜி வழங்கினார். அப்போது சீரடி பர்த்தி சாய் லட்சுமி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக டிரஸ்டி ஜெ.காய்திரி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment