FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, December 23, 2018

அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை

22.12.2018, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்களுக்கு ஹரி கீர்த்தனா(வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத நிலையில் உள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபு முடிவு செய்தார். அதன்படி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரபு, தனக்கு ரேஷன் கார்டு கேட்டு அவினாசி வட்ட வழங்கல் அதிகாரி ராகவியிடம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பிரபு-ரஞ்சிதா ஆகியோர் தனது குழந்தையுடன் வந்து கலெக்டரை சந்தித்தனர். தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைகளை நீக்குவதற்கு அரசின் நிதியுதவி கேட்டு விண்ணப்பம் செய்தனர். இதைக்கேட்டறிந்த கலெக்டர், சிறுமி ஹரி கீர்த்தனாவுக்கு ஆதார் எண் பெறப்பட்டு சிறுமியின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் துறை மூலமாக பிரபுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார். இதற்கு பிரபு நன்றி தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு காது கேட்பதுடன் வாய் பேசவும் வாய்ப்பாக அமையும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், மருத்துவ காப்பீட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment