FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, December 23, 2018

அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை

22.12.2018, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்களுக்கு ஹரி கீர்த்தனா(வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத நிலையில் உள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபு முடிவு செய்தார். அதன்படி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரபு, தனக்கு ரேஷன் கார்டு கேட்டு அவினாசி வட்ட வழங்கல் அதிகாரி ராகவியிடம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பிரபு-ரஞ்சிதா ஆகியோர் தனது குழந்தையுடன் வந்து கலெக்டரை சந்தித்தனர். தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைகளை நீக்குவதற்கு அரசின் நிதியுதவி கேட்டு விண்ணப்பம் செய்தனர். இதைக்கேட்டறிந்த கலெக்டர், சிறுமி ஹரி கீர்த்தனாவுக்கு ஆதார் எண் பெறப்பட்டு சிறுமியின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் துறை மூலமாக பிரபுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார். இதற்கு பிரபு நன்றி தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு காது கேட்பதுடன் வாய் பேசவும் வாய்ப்பாக அமையும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், மருத்துவ காப்பீட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment