FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, December 23, 2018

அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை

22.12.2018, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்களுக்கு ஹரி கீர்த்தனா(வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத நிலையில் உள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபு முடிவு செய்தார். அதன்படி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரபு, தனக்கு ரேஷன் கார்டு கேட்டு அவினாசி வட்ட வழங்கல் அதிகாரி ராகவியிடம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பிரபு-ரஞ்சிதா ஆகியோர் தனது குழந்தையுடன் வந்து கலெக்டரை சந்தித்தனர். தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைகளை நீக்குவதற்கு அரசின் நிதியுதவி கேட்டு விண்ணப்பம் செய்தனர். இதைக்கேட்டறிந்த கலெக்டர், சிறுமி ஹரி கீர்த்தனாவுக்கு ஆதார் எண் பெறப்பட்டு சிறுமியின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் துறை மூலமாக பிரபுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார். இதற்கு பிரபு நன்றி தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு காது கேட்பதுடன் வாய் பேசவும் வாய்ப்பாக அமையும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், மருத்துவ காப்பீட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment