FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, December 23, 2018

அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை

22.12.2018, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்களுக்கு ஹரி கீர்த்தனா(வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத நிலையில் உள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபு முடிவு செய்தார். அதன்படி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரபு, தனக்கு ரேஷன் கார்டு கேட்டு அவினாசி வட்ட வழங்கல் அதிகாரி ராகவியிடம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பிரபு-ரஞ்சிதா ஆகியோர் தனது குழந்தையுடன் வந்து கலெக்டரை சந்தித்தனர். தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைகளை நீக்குவதற்கு அரசின் நிதியுதவி கேட்டு விண்ணப்பம் செய்தனர். இதைக்கேட்டறிந்த கலெக்டர், சிறுமி ஹரி கீர்த்தனாவுக்கு ஆதார் எண் பெறப்பட்டு சிறுமியின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் துறை மூலமாக பிரபுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார். இதற்கு பிரபு நன்றி தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு காது கேட்பதுடன் வாய் பேசவும் வாய்ப்பாக அமையும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், மருத்துவ காப்பீட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment