FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, December 17, 2018

அடடே...இப்படியும் ஒரு உணவகமா? காதுகேளாத & வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க புதிய முயற்சி!

17.12.2018
ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

The Daily Grinds என்ற பெயரில் திவாகர் அரோரா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் சமையல்காரர், சுத்தம்செய்பவர், கணக்குபார்ப்பவர் என அனைத்து வேலையாட்களும் மாற்றுத்திறனாளிகள் தான். அதிலும் பெரும்பாலானவர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்.

இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்துவமான முறையில் வரவேற்று, திருப்திகரமான உணவு வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான உணவை மெனு கார்டில் தொட்டு காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கூடிய இந்த உணவகத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஒரே வகையான உணவுப்பொருட்களை தினமும் வழங்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தன் உணவுப்பட்டியலை மாற்றிக்கொள்வது இந்த உணவகத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த உணவகத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற உணவகத்தை தொடங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என தன் கனவுகளை பகிர்ந்துகொண்டார் உரிமையாளர் அரோரா.

No comments:

Post a Comment