FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 17, 2018

அடடே...இப்படியும் ஒரு உணவகமா? காதுகேளாத & வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க புதிய முயற்சி!

17.12.2018
ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

The Daily Grinds என்ற பெயரில் திவாகர் அரோரா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் சமையல்காரர், சுத்தம்செய்பவர், கணக்குபார்ப்பவர் என அனைத்து வேலையாட்களும் மாற்றுத்திறனாளிகள் தான். அதிலும் பெரும்பாலானவர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்.

இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்துவமான முறையில் வரவேற்று, திருப்திகரமான உணவு வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான உணவை மெனு கார்டில் தொட்டு காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கூடிய இந்த உணவகத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஒரே வகையான உணவுப்பொருட்களை தினமும் வழங்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தன் உணவுப்பட்டியலை மாற்றிக்கொள்வது இந்த உணவகத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த உணவகத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற உணவகத்தை தொடங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என தன் கனவுகளை பகிர்ந்துகொண்டார் உரிமையாளர் அரோரா.

No comments:

Post a Comment