FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, December 17, 2018

அடடே...இப்படியும் ஒரு உணவகமா? காதுகேளாத & வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க புதிய முயற்சி!

17.12.2018
ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

The Daily Grinds என்ற பெயரில் திவாகர் அரோரா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் சமையல்காரர், சுத்தம்செய்பவர், கணக்குபார்ப்பவர் என அனைத்து வேலையாட்களும் மாற்றுத்திறனாளிகள் தான். அதிலும் பெரும்பாலானவர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்.

இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்துவமான முறையில் வரவேற்று, திருப்திகரமான உணவு வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான உணவை மெனு கார்டில் தொட்டு காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கூடிய இந்த உணவகத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஒரே வகையான உணவுப்பொருட்களை தினமும் வழங்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தன் உணவுப்பட்டியலை மாற்றிக்கொள்வது இந்த உணவகத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த உணவகத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற உணவகத்தை தொடங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என தன் கனவுகளை பகிர்ந்துகொண்டார் உரிமையாளர் அரோரா.

No comments:

Post a Comment