FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, December 15, 2018

சினிமா, 'டிவி' வேலைவாய்ப்பு : மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

14.12.2018
திருவள்ளூர்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் ஈடுபடும் வகையில், நடைபெறும் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி வகுப்புகளில், மாற்றுத்திறனாளிகள் சேர விண்ணப்பிக்கும்படி, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.ஒரு மாத காலம்இப்பயிற்சி மூலம் சினிமா, தொலைக்காட்சி, போட்டோ ஸ்டூடியோ, பத்திரிகை மற்றும் செய்தி தாள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.பயிற்சியின் முடிவில், சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.'மல்டி மீடியா' மற்றும் 'ஆவிட், எப்.சி.பி.,' படத்தொகுப்பு, ஸ்டில் போட்டோகிராபி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.ஒரு மாதம் கால பயிற்சி வகுப்பில், 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து பயன்பெறலாம்.எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த கை, கால் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் தகுதியானவர்கள்.விருப்பமுள்ளோர், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை எடுத்து கொள்ளவும்.விண்ணப்பிக்கலாம்அவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு, இன்று முதல், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2766 2985 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment