FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 15, 2018

சினிமா, 'டிவி' வேலைவாய்ப்பு : மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

14.12.2018
திருவள்ளூர்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் ஈடுபடும் வகையில், நடைபெறும் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி வகுப்புகளில், மாற்றுத்திறனாளிகள் சேர விண்ணப்பிக்கும்படி, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.ஒரு மாத காலம்இப்பயிற்சி மூலம் சினிமா, தொலைக்காட்சி, போட்டோ ஸ்டூடியோ, பத்திரிகை மற்றும் செய்தி தாள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.பயிற்சியின் முடிவில், சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.'மல்டி மீடியா' மற்றும் 'ஆவிட், எப்.சி.பி.,' படத்தொகுப்பு, ஸ்டில் போட்டோகிராபி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.ஒரு மாதம் கால பயிற்சி வகுப்பில், 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து பயன்பெறலாம்.எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த கை, கால் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் தகுதியானவர்கள்.விருப்பமுள்ளோர், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை எடுத்து கொள்ளவும்.விண்ணப்பிக்கலாம்அவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு, இன்று முதல், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2766 2985 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment