FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 18, 2018

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு பேரணி

17.12.2018
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

இந்தியாவில் 50 லட்சம் பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்களாகவும், 19 லட்சம் பேர் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களாவும் உள்ளனர். பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு 3-வது நாளில் செவிப்புலன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் திறனை மேம்படுத்த அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment