FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, December 18, 2018

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு பேரணி

17.12.2018
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

இந்தியாவில் 50 லட்சம் பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்களாகவும், 19 லட்சம் பேர் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களாவும் உள்ளனர். பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு 3-வது நாளில் செவிப்புலன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் திறனை மேம்படுத்த அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment