FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, December 10, 2018

சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment