FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 10, 2018

சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment