FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 10, 2018

சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment