FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, December 15, 2018

ஸ்கூட்டர், தையல் எந்திரங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

14.12.2018
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தபட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மேலும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கால்கள் பாதிக்கப்பட்டு 2 கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள், பணிபுரிவோர், சுயதொழில் புரிவோர் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுநாள் வரை இத்துறையின் மூலம் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் பேச்சு திறனற்ற நபர்கள் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் வருமான வரம்பு இல்லை. மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதுநாள் வரை அரசு துறைகளின் மூலம் தையல் எந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தபட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற கல்வி பயிலும் சான்று, பணிபுரிவோர், சுயதொழில் புரிவோர் என்பதற்கான சான்று, தையல் எந்திரம் பெற தையல் பயிற்சி பயின்றமைக்கான சான்று மற்றும் கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment